ஏட்டினை புரட்டுகிறேன்
என் முன்னே
எழுதிய பக்கங்கள் விரிகிறது
இதயத்தின் பக்கங்களை புரட்டுகிறேன்
என்னுள்ளே
ஒரு வாழ்க்கையின் புத்தகம் விரிகிறது.
வானத்தைப் பார்கிறேன்
நிறங்களில் வானவில்
அழகிய காட்சியாய் வானில் விரிகிறது
இந்த பூமியை பார்க்கிறேன்
ஏனோ இங்கே
சிவப்பு மட்டும் குருதியாய் ஓடுகிறது
இயற்கையை பார்க்கிறேன்
எழிலுடன்
பசுமை வளத்துடன் எங்கும் சிரிக்கிறது
இங்கே ஏழை மனிதனைப் பார்க்கிறேன்
நம்பிக்கையில்
வாக்களித்த வாழ்க்கை கண்ணீரில் நிற்கிறது