பெற்றவர்கள்
பெற்று விட்ட காரணத்தினால்
குழந்தைகள் உங்களுக்கு அடிமைகள்யில்லை .
நீங்கள் சொல்வதை விட
அவர்கள் சிந்தித்ததை
சொல்ல விடுங்கள் .
சக்தி குறைவான நிலை இது
புத்தி தெளிவான நிலை இது .
"நான் என் குழந்தையை
சுதந்திரமாக வைத்திருக்கிறேன் "
என்பவரின் குழந்தையை
கூப்பிட்டு கேட்டால்தானே தெரியும்
அதன் கூப்பாடு .
கொடி படறுவது போலத்தான் அன்பும்.
அன்பு என்பதை கடைசிவரை
வெளிப்படுத்தத் தெரியாமலே
இறந்துபோகக்கூடிய பெற்றோர்கள்
நிறையப்பேர்
குழந்தையிடம் ஜெயிப்பதை விட
குழந்தையை ஜெயிக்க விட்டு
இரசிப்பதே சுகம் .
நீர் செய்த ஒவ்வொன்றும்
அதன் நியாபகத்தில்இருக்காது
நீர் செய்த சிலவற்றை
அவை மறக்காது .
சில குழந்தை
ஒன்றும் செய்யாமலே செல்லும்
சில குழந்தை
பழிவாங்கவும் துடிக்கும்
நீர் அதற்கு எதிராக செய்த
சிறு செயல்
பின்னால் விஸ்வரூபமெடுக்கும் .
ஒரு குழந்தை செய்த தவறை
மறு குழந்தையும் செய்யுமோ
என செய்து விட்டதாக
பாவிப்பதே அதன் அன்பை பாதிக்கும்
குழந்தை வேண்டும் என்று
தவமிருந்தவர்கள் கூட
சரியாக அவர்களிடம்
நடந்து கொள்வதில்லை
உன்னை உணர்
உயிர்களை
தானாக உணர்வாய் .
No comments:
Post a Comment