Saturday, March 29, 2014

என் மரணம்

உடை வாளை 
இறுக்காத சரணகதியும் 
உயிர் வாழ கேட்கின்ற 
இறுதி நிலையுமாய் 
அமையும் அத்தருணம் 

நிகழ்கால நிரலொன்றின் 
நிச்சிலப் பொழுதொன்றில் 
நிமிடத்திற்கும் 
வினாடிக்கும் இடையில் 
கண்காணிப்பை மீறி 
கணிக்கப் பட்டிருக்கும் அந்நொடி 

யார் பிடித்து வைத்திருப்பாரோ 
யாருக்கும் தெரியாது 
உள்ளிழுத்த காற்றை 
வெளியேற விடாத வேளையாய் 
சம்பவிக்கும் அச் சடங்கு 

உடன்கட்டை ஏற என்னுடன் 
ஒப்புக்கொண்டவள் 
உயிர் கட்டை இறங்க 
தப்பிக் கொண்டவளாய் தள்ளி நின்று 
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு 

பிள்ளைப் பாத்திரங்கள் 
பிரிந்த மாத்திரத்தில் 
கண்கள் பனிப்பார்கள்-கொஞ்சம் 
கவலை தொனிக்க 

சக சொந்தங்கள்-என் 
சா முன் குறை மெழுகி 
அனுதாப பூச்சுகளால் 
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர் 

பெயர் மறந்த ஊர் பிரியத்தின் பேரால் 
“மையத்து”அல்லது பிணம் என்று 
மகுடம் சூட்டுவர் 

ஊர் வலமாய் வரும்-என் 
உடல் வளம் கைமாற 
நான் ஆக்கிரமித்த மண் 
என்னை ஆக்கிரமிக்க 
வாய் பிளந்து 
வழிபார்த்து காத்திருக்கும். 

Thursday, March 27, 2014

மனம் எனும் கொதிகலன்


 அலைமோதும் எண்ணங்களின் 
ஆர்ப்பாட்டத்தால் 

தேடல்களில் ஏமாற்றங்கள் .. 
தோல்விகளில் தாக்கங்கள் .... 

வருத்தங்களின் பதிவுகள் ... 
வலிகளால் வலிகள் ... 

நிகழ் காலத்தின் தாக்கங்கள் 
எதிர் காலத்தின் காயங்கள் .. 

சலனமான எண்ணங்களினால் 
சமுதாயத்தில் ஒதுக்கல்கள்... 

மனம் கொதிகலனாய் செயல்பட்டு 
பாளம் பாளமாய் வெடிப்புக்கள் .. 

அமைதியை தொலைத்து 
அணு அணுவாய் சிதையும் இக் கால கட்டத்தில் 

மனதை கட்டுபாட்டுக்குள் வைக்க 
மன அமைதியோடு வாழ விதி முறைகள் ..... 

"நீ சிரித்து பார் 
உன் முகம் உனக்கு பிடிக்கும் 

நீ மற்றவர்களை சிரிக்க வைத்து பார் 
உன் முகம் மற்றவர்களுக்கு பிடிக்கும் ".. 

தேடல்கள் .... 
வாழ்வின் அனுபவங்கள் .... 

மகிழ்ச்சியான சுற்றுப்புறதிர்க்கு 
மனம் எனும் கொதிகலனை 

மிதமான தீயில் வைத்து 
நேரத்தை நேர்மையாய் பயன்படுத்தி 

விடா முயற்சியை தூண்டிலாக்கி 
இலக்கை இலகுவாய் தொடுவோம் 

இனிமையாய் செயல் படுவோம் 

இன்று மட்டும் தான் இன்று 
நாளை இன்று நேற்றாகி விடும் ....