Monday, May 26, 2014

காட்சிகளும் மாறிடுமோ ​

​பொய்யும் புரட்டும் பெருகுது 

மெய்யும் நாட்டில் மறையுது ! 

​செய்யும் தொழிலோ தேயுது 

பெய்யும் மழையும் குறையுது ! 


வாய்மை வளைந்தே போனது 

நேர்மை குனிந்தே செல்லுது 

உண்மை என்றுமே உறங்குது 

அறியாமை எதிலும் நிலவுது ! 


பகைமை நட்பை முந்துது 

பொறாமை தீயே பரவுது 

பொறுமை நிதானம் இழக்குது 

பொய்மை உலகை ஆளுது ! 


சுயநலமே முன்னிலை வகிக்குது 

சுரண்டிடும் எண்ணமே வளருது 

சுமைகளே நமைசுற்றி நிற்குது 

சூதும்வாதுமே ஓதும் வேதமாகுது ! 


காண்பதும் நிகழ்வதும் இவையன்றோ 

மாறுவதும் தேறுவதும் என்றுதானோ 

மகிழ்வதும் வெல்வதும் என்றுதானோ ! 



Sunday, May 11, 2014

யோசிக்கும் உறவுகள்

முடிந்தவரை ஒதிங்கி விடு 
இந்த உறவுகளை விட்டு 

உன் மீது முழுமையான பாசம் 
இல்லை விட்டு விடு 

வேஷம் கொண்ட முகங்க்களாய் 
தினம் தோன்றும் 

வேற்றுமை கொண்ட மனம் அது 
நிஜங்கள் பேரம் பேசும் 

தனக்கு மட்டும் என்ற நிலை 
இணக்கமாய் கொண்டு விடும் 

கணக்கு போட்டு வாழ்கையில் 
இனி காய் நகர்த்தும் மெல்ல 

உண்மையான அன்பை என்றும் 
உன்னிடம் தேடு 

போலி வேஷம் களையும் நாள் 
உன் கண் முன் தோன்றும் 

பணத்தை நேசிக்கும் முகங்கள் 
பாசத்தை நேசிக்க யோசிக்கும் !