Monday, May 26, 2014

காட்சிகளும் மாறிடுமோ ​

​பொய்யும் புரட்டும் பெருகுது 

மெய்யும் நாட்டில் மறையுது ! 

​செய்யும் தொழிலோ தேயுது 

பெய்யும் மழையும் குறையுது ! 


வாய்மை வளைந்தே போனது 

நேர்மை குனிந்தே செல்லுது 

உண்மை என்றுமே உறங்குது 

அறியாமை எதிலும் நிலவுது ! 


பகைமை நட்பை முந்துது 

பொறாமை தீயே பரவுது 

பொறுமை நிதானம் இழக்குது 

பொய்மை உலகை ஆளுது ! 


சுயநலமே முன்னிலை வகிக்குது 

சுரண்டிடும் எண்ணமே வளருது 

சுமைகளே நமைசுற்றி நிற்குது 

சூதும்வாதுமே ஓதும் வேதமாகுது ! 


காண்பதும் நிகழ்வதும் இவையன்றோ 

மாறுவதும் தேறுவதும் என்றுதானோ 

மகிழ்வதும் வெல்வதும் என்றுதானோ ! 



No comments:

Post a Comment