Saturday, August 27, 2011

உண்மையின்பம்


தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]


நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்

கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே

நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ

ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

No comments:

Post a Comment