Sunday, May 20, 2012

பாலையும், நெருப்புமாய்.....!!

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......

Tuesday, May 15, 2012

மதம்

புறாக்கள் உயரத்திலே அதிகமாக தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும். அவ்வாறு மூன்று புறாக்கள் ஒரு கோவில் கோபிரத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டன, ஒருநாள் கோவில் திருவிழாவிற்காக அலங்கரிப்பு வேலைகளில் பக்த்தர்கள் அதிகம் ஈடுபட்டிருந்தனர். அமைதிக்கு இலக்கணமான புறாக்கள் அதிக ஜன கூட்டத்தை விரும்புவதில்லை, ஆதலால் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு ஓர் மசூதியில் நிலை கொண்டன. அங்கு சில காலம் வசித்து வருகையில் ரமளான் திருநாள் நெருங்குகையில் மசூதிக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். புறாக்களும் தமது இருப்பிடத்தை தேவாலயம் ஒன்றிட்க்கு மாறிக்கொண்டது. அங்கும் தமது குறுகிய ஆயுள் காலத்தை வாழ்ந்து முடிக்கவில்லை. நத்தார் கொண்டாட்டத்திர்க்காக வேலைகள் விறுவிறுப்பாக இடம் பெற்றது. அங்கிருத்து பிறிதொரு இந்துக் கோவிலுக்கு மாற்றிக்கொண்டன.
ஓர் நாள் கோவிலின் அடிவாரத்தில் ஓலக்குரல்கள் ஒலித்தது, புறாக்கள் கீழே பார்த்தன பக்த்தர்களிடையே வாள் வெட்டு.
குஞ்சு புறா தாய் புறாவிடம் கேட்டது, ஏன் மனிதர்கள் சண்டையிடுகிறார்கள் என்று. தாய் புறா அதற்க்கு பதிலழித்தது, மனிதர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவம் என்று மதம் பிரித்துள்ளது. மதத்தினால் மனிதர்கள் மதம்பிடித்து திரிகிறனர் என்றது. குஞ்சு புறா மீண்டும் கேட்டது, எங்களுக்கு அப்படி எதுகுமில்லையா என்று கேட்டது. தாய் புறா பதிலழித்தது நமக்கு அப்படி இல்லாதலால் தான் நாம் அவர்களுக்கு மேலே இருக்கிறோம் என்று மனிதனை பார்த்தவாறு எழனமாக குஞ்சு புறாவுக்கு கூறியது.

Saturday, May 12, 2012

பணம்


பேசியதாய் சொன்ன ,
கடவுள் கல்லாகிவிட ,
இன்று பேசிக்கொண்டு இருக்கிறது
காகிதகடவுள் "பணம் "!

கடவுளை தரிசிக்க
அர்ச்சனை சீட்டு !

கோவில் அர்ச்சனைதட்டில்
பணம் போட்டால் தான்
அய்யர் கூட விபுதி கொடுக்கிறார் !

சில்லறை போடாவிட்டால்
பிச்சக்காரன் கூட
தனக்கு கீழ் என்று
கேவலமாய் பேசுகிறான் !

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
பணம் சம்பாதித்து கொடுக்காவிட்டால் ,
ஊர்சுத்தி என்ற புது பட்டம் !

நடிப்பு என்ற உலகில்
சாயங்களை பூசிக்கொள்ள
"பணம் " பட்டம் !

குச்சி முட்டாய்
வாங்க காசிள்ளவிட்டால்
அப்பனைக்கூட டேய் என கூப்பிடும்
குட்டி குரங்குகள் !

உள்ளே உள்ளதையெல்லாம்
மறைத்துவிட்டு
வெளியே வேடிக்கை காட்டும்
பணக்காரா கழுகுகள் !

காசுக்காக நீதியைகூட
கூண்டில் ஏற்றும் ,
பணம்(பலம்) வாய்ந்த சட்டங்கள் !

ஆறடி பள்ளம் தோண்டவும்
ஆயிரம் ருபாய் பணம் கேட்கும்
வெட்டியான்கள் !

சொத்து ஓட்டத்தை தீர்மானிக்கும்
ரத்த ஓட்டங்கள் ,
கையில் காசில்லாமல் போனால்
கைதட்டி சிரிக்கும் ஏளனக்கூட்டம் !

அப்பனை மகன் வெட்டுகிறான் ,
மகனை அப்பன் வெட்டுகிறான்
எல்லாம் பணத்துக்காக !

நேசமாய் கிடைக்கவேண்டிய
அந்தரங்கம் கூட
காசுக்காக கூவி கூவி தெருவில் !

நூறு ருபாய் விதை போட்டு
ஆயிரம் கொடிகள் கொள்ளையடிக்கும்
அரசியல் திருடர்கள் !

பட்டுபுடவை வாங்கி தராததால்
பகையாளிகளாக மாறும் ,
கணவன் , மனைவிகள் !

அன்பு ,
நேசம் ,
பாசம் ,
எல்லாம் பணத்தில்
அடகுவைத்துவிட்டர்கள் ,
இனி என்ன
பணம் தான் பேசும்

Friday, May 11, 2012

தெய்வீக நட்பு,,,,,,,,,,,,

நண்பா !
என்னை பார்க்கும்
போதெல்லாம் - சிரிக்கிறாய் ,
மலரும் பூவாய்
முகம் மலர்ந்து - அழைக்கிறாய் ,
தினம் எனை பார்த்தாலும்
திடீர் விருந்தாளியை
உபசரிப்பது போல் உபசரிக்கிறாய் ,

எந்த அவசர வேலையையும்
எனக்காக ஒதுக்குகிறாய் ,
உறவுகளை எல்லாம் உதறிவிட்டு
என்னோடு ஊர் சுற்ற
வந்து விடுகிறாய் ,

என்னை தவிர்த்து
சாப்பிட மறுக்கிறாய் ,
சாப்பிடுகையில்
என் தட்டில்
உன் உணவையும்
எடுத்து வைகிறாய் ,

எவ்வளவு திட்டினாலும்
சரி சரி விடு என்கிறாய்,
கோபமாக முறைத்தாலும்
குழந்தையாக சிரிக்கிறாய் ,

உனக்கு
உதவாத போதும் - எனை
உதாசீன படுத்தவில்லை - நீ
என் சுமைகளை
சுமந்து கொள்ள
குனிந்து நிற்கிறாய் - நீ ,

கண்ணனாக போதிக்கிறாய்
கர்த்தராக மன்னிக்கிறாய்
அல்லாவாக அன்பு சொல்கிறாய்
கவலைகள் மறக்கும்
மருந்தாக இருக்கிறாய்
பாசமெனும் விருந்தாக இனிக்கிறாய்,

மாகன்களின்
சந்திப்பை விட - உன்
சந்திப்பில்
மனம் மகிழ்கிறது

நண்பா !
சந்நிதானத்தின்
தெய்வ தரிசன சிலிர்ப்பை
உன் தூய நட்பில்
உணர முடிகிறது - இப்போது.

Tuesday, May 8, 2012

மனிதன் யார்

மனிதன் யார்

கடவுளின் படைப்பில்
விலங்கு, பறவை ,
எல்லாம் அப்படியே பார்வையில் ,
ஏனோ மனிதன் மட்டும் கண்ணில் படாமல் !

ஊமையின் உபாசனம் ,
குருடனின் வழிகாட்டல் ,
செவிடனின் இசை ஆர்வம் ,
என எல்லாம் நம்பிடலாம் ,
மனிதனை மனிதனாக பார்பதற்கு பதில் !

தனக்கொன்று நேர்ந்தால்
தரணியையே வெறுப்பான் ,
மற்றவனுக்கு என்றால்
மார்தட்டி சிரிப்பான் !

பணம் என்ற பார்வையில்
மனம் தெரியாமல் போகும் ,
சினம் என்று வந்துவிட்டால் ,
மிருகங்களும் தோற்கும் !

அதிகார போர்வையில்
ஆணவம் தலைதூக்கும் ,
அடங்கி போனபின்பு ,
அத்தனையும் செயலிழக்கும் !

இன்பத்தில் தோல்கொடுப்பான்
துன்பத்தில் கால் இழுப்பான் ,
நன்றி விசுவாசத்தில்
நாய் கூட சற்று மேல் !

வேட்டைமீது குறி இருக்கும் ,
வேண்டும்போது அன்பிருக்கும் ,
அத்தனையும் ஆனபின்பு ,
நீ யார் என்பது அடுத்த கேள்வி !

மனிதம் இருக்காது ,
மதம் இருக்கும் ,
அன்பு இருக்காது ,
ஆசை இருக்கும் ,
குணம் இருக்காது
கோபம் இருக்கும் !

Thursday, May 3, 2012

கடவுள் பக்தி


----கல் அல்ல கடவுள்----

ஈரோட்டு கிழவனுக்கு
செவி கொடுக்காதவர்கள்.
என் மை பாட்டுக்கா
மனமாறிவிடுவார்கள்?

கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படித்தான் என் கவியும்.

நேரடியாக கேட்டுவிடுகிறேன்
நெருஞ்சி முள் கேள்விகளை
உங்களிடம்..

வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?

தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சிளம் பிள்ளைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...

இங்கு
வாய் வரைந்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.

நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு பாலாபிசேகம்.

யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பிராத்தனை செய்த
சித்தர்கள் யார்?

தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதாய்
துதிபாடுவோரே!

சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன்
அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?

நான் மனிதன் என்று சொன்னால்
நகைத்து
இவன் பைத்தியம் என்பீர்கள்.

நான் சாமி என்று சொன்னால்
நம்பி
இவனே பரமபொருள் என்பீர்கள்.

பைத்தியமே
உன் பகுத்தறிவு
பாராட்டுக்குரியது.

எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?

செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
- - - - - - க்கு வையுங்கள்
செத்துமடியட்டும்.

சிந்தித்துப் பாரப்பா....
உண்டியலுக்கும்
திருவோடுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?

உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.

வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.

நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.

ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.

உன் அருகில் உள்ளவன்
அழுகும் போது
அவனை அரவணைத்து
அறுதல் சொல்
அதுவே ஆன்மிகம்.

உன் இறைவனை
உயர்திணையில்
உட்கார வைத்த நீ

அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?

கல்லை வழிபடும்
உங்கள் கூற்றுப்படி
உலகிலே பெரிய கடவுள்
இமய மலைதான்.

கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.

Wednesday, May 2, 2012

என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை

நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
---திரு. டெஸ்கார்டஸ்--

இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது.
எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
--பெயர் தெரியா பெரியவர்---

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
--புத்தர்---

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
--பெயர் தெரியா பெரியவர்---

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---மாவீரன் நெப்போலியன்---

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.
வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.
--பெயர் தெரியா பெரியவர்---

நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்---

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
--பெயர் தெரியா பெரியவர்---

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
--பெயர் தெரியா பெரியவர்---

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
--ரஸ்கின்---

எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
---திரு. எட்மன்ட் பார்க்---

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா---

காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம்.
ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும்
செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
--பெயர் தெரியா பெரியவர்---

நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,
நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
--சுவாமி விவேகாந்தர்--

எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு,
உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர்.
--பெயர் தெரியா பெரியவர்---

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
--- அண்ணல் காந்தி ---

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
---தத்துவஞானி சாக்ரடீஸ்--

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
--தத்துவஞானி கன்பூசியஸ்---

அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான்.
அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,
ஒருவருக்கு உணவளி அது போதும்

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--அன்னை திரசா--

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
--திரு. வோயாஸ்---

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
--கவிஞர் ஹோமர்--

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
--பெயர் தெரியா பெரியவர்---

வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
--கவிஞர் சுகி---

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.
உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான்.
சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
---பைபிள்---

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
---திரு. ஹென்றி டேவிட் தேரோ----

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
-- தத்துவஞானி கன்பூசியஸ்---

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
--திரு. டாக்டஸ்--

வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னால் இது முடியும் என்று சொல்கிறபோது
அந்த செயலை செய்ய
என்னைப் போல் ஒரு சோம்பேறியை பார்க்க முடியாது.
உன்னால் இது முடியாது என்று சொல்கிறபோது
என்னைப்போல் ஒரு இயந்திரத்தை பார்க்க முடியாது.
-- நான்---

அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.
--பெயர் தெரியா பெரியவர்---

எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
--பெயர் தெரியா பெரியவர்---

சாதிக்க துடிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்

பணக்கார பிச்சைக்காரன்

சில்லறை நிரம்பிய
பிச்சைக்காரன் தட்டில் ,
காசு போடா பாக்கெட்டை
தடவி தடவி பார்க்கிறான்
பணக்கார பிச்சைக்காரன் !

Tuesday, May 1, 2012

கடவுள்

கல்லை செதுக்கி சிற்பம் வடித்தான் சிற்பி....! அந்த சிற்பமோ கருவறையில் சிற்பியோ தெருவறையில்...!