Saturday, January 11, 2014

வேண்டாத மோகம்

களி ஆட்டமும், கத்தும் இசையும், 
நவ நாகரிகம் என்றால், 
பாட்டும், பரதமும், 
பண்பாடு தரும் சுகமல்லவா ! 

பயன்பாடு என்ற பெயரால் , 
பரிகசிக்கும் உடையணிந்து , 
உடல் அழகு வெளிக்காட்டுதல் முறையோ ? 
பாவாடை, தாவணி, சேலையும், 
பார்ப்பவர் மதிக்கும் உடையல்லவா ! 

உண்டி சுருங்கின் நன்று ! 
உடை சுருங்கின் நன்றாமோ ? 

நுனி நாக்கு ஆங்கிலம் மேதா விலாசம் என்றால், 
தன்னிகரில்லா தமிழ், தாயினும் மேலான 
நம் தாய் மொழி அல்லவா ! 

வாயில் நுழையாத பேரும், 
கலந்தது தெரியாத பொருளும், 
உடம்பை கெடுக்கும் உணவு உயர்வு என்றால், 
அரிசி மாவு புட்டும் மிளகோடு பொங்கலும் 
செரிக்கும் சரியான காலை உணவல்லவா ! 

தேனீரும், காப்பியும் சரிதான் 
சாயக்கலக்கலாம் கோக்கும், பண்டாவும் 
உன்னத பானமென்றால் 
சுக்கு காப்பியும், கூழும், கஞ்சியும்,நீராகாரமும் உடல் உறுதி 
தரும் பருகும் பானமல்லவா ! 

உயர்வை நிறைவையும் புறம் தள்ளி 
புரியாத தெரியாத பொருள் மேல் 
வேண்டாத மோகம் கொள்ளுதல் சரியோ ?

No comments:

Post a Comment