Wednesday, August 29, 2012

வெறுப்பு.....!

வாசனையை
தரவிரும்பாமல்
அணையத் துடிக்குது
ஒரு
ஊதுபத்தி......!

Monday, August 27, 2012

அன்பின் துடிப்பு....

நீ அன்பை நிரந்தரமாக்க...

நினைத்தாய் என்றால்....

பொறுமைக்கு தலை வணங்கு.....

உன் தலைக்கு....

மகுடம் ஆவதற்கு....

அன்பின் மனம் துடிதுடிக்கும்......

Sunday, August 19, 2012

மூன்று ஆண்டுகள்....!

ஊரை விட்டு
நாட்டை
விட்டு..... அன்பிற்கு
உரியவர்களை
விட்டு.....அடைக்கலம்
தேடி..... புலம்பெயர்ந்து
இன்று மூன்று
ஆண்டுகள்
ஆனது.....ஆகியும்
முடியவில்லை.....பிரியும்
போது கையடக்க
தொலைபேசியில்
மனசில்...... அடக்கமுடியாத
சோகங்களை.....அப்படியே
சொல்லி..... விட்டு... நான்
ஆறுதல்
இல்லாமல்..... ஆயத்தமாகிய
அந்த நினைவுகள்
நிஜமாகவே
கொல்லுது......!

உறவுமுறை வேண்டாம்.....

என்கூட
பிறந்த உறவுகளோடு.....
எனக்கு
அண்ணா....
அக்கா....
தம்பி தங்கை.....என்கிற
உறவு
தொலைந்து போகட்டும்.....

பட்ட கடன்
அடைக்க
உழைத்து வாழ்கிறேன்.....

கடன் பட்டுவிட்டேன்.....
அதைக்கொடுத்து
அவர்களோடு
ஒரு வாடிக்கையாளன்
போல.....வாழும்

அந்த ஒரு உறவுமுறை
மட்டுமே இப்போது.....அது
போதும்...... போகும்
வரைக்கும்......!!

Saturday, August 4, 2012

யார் மனிதன் ..?


யார் மனிதன் ..?
கூட வருபவரெல்லாம் நண்பரில்லை
எதிரே நிற்பவன் எல்லாம் எதிரியுமில்லை !
முகத்துக்கு முன்னே சிரிப்பார் ..
முதுகுக்குப் பின்னே உதைப்பார்..!

துன்பம் வர வேண்டிக்கொள்..!
துன்பமே மனிதனை அளக்கும் கோல்..!
அளந்து எதிரியைத் தெரிந்து கொள் ..!

எவரையும் எளிதில் நம்பாதே !
நம்பியபின் சந்தேகத் தீயில் வெம்பாதே !

"ஆமா"போடுபவன் எல்லாம் நண்பனல்ல !
"இல்லை" சொல்பவன் எல்லாம் எதிரியுமல்ல


உணர்ந்து அறி !
துரோகிகளைத் தூக்கியெறி !