Saturday, August 4, 2012

யார் மனிதன் ..?


யார் மனிதன் ..?
கூட வருபவரெல்லாம் நண்பரில்லை
எதிரே நிற்பவன் எல்லாம் எதிரியுமில்லை !
முகத்துக்கு முன்னே சிரிப்பார் ..
முதுகுக்குப் பின்னே உதைப்பார்..!

துன்பம் வர வேண்டிக்கொள்..!
துன்பமே மனிதனை அளக்கும் கோல்..!
அளந்து எதிரியைத் தெரிந்து கொள் ..!

எவரையும் எளிதில் நம்பாதே !
நம்பியபின் சந்தேகத் தீயில் வெம்பாதே !

"ஆமா"போடுபவன் எல்லாம் நண்பனல்ல !
"இல்லை" சொல்பவன் எல்லாம் எதிரியுமல்ல


உணர்ந்து அறி !
துரோகிகளைத் தூக்கியெறி !

No comments:

Post a Comment