Friday, December 27, 2013

துரோக முள்

  என் கற்றைக் கோபங்களெல்லாம் 

ஒற்றை நாளில் முடிந்து போகும் 
ஈசலின் ஆயுளைப் போலத்தான்... 
எனினும் 
உன் நட்பின் அழுக்கை 
ஈசனின் நெற்றி நெருப்பைப் போல 
சுட்டெரித்து விட்டது...! 

எப்படிச் சாத்தியப்பட்டது 
உன்னால் 
நம் நட்பின் முகத்தில் 
அமிலம் வீச...! 

ஆழம் குறைந்த 
உன் நட்பு நதியில் 
இனி 
என் நேசப் படகைச் செலுத்த முடியாது 
சேற்றில் எப்படிச் செலுத்துவது நட்பை...? 

அஞ்சு வயதில் 
அம்மணமாய் நிற்பதைப் போல 
ஆயுசுக்கும் நிற்க முடியாது 
அறியாதவனா நீ...? 

தொண்டையில் சிக்கிய 
துரோக முள்ளாக 
விழுங்கவும் முடியாமல் 
துப்பவும் வழியற்று 
ரணப்படுத்தும் 
உன் நட்பு வார்த்தைகள்...! 


No comments:

Post a Comment