கோபம் என்பது அமிலமாகும்
முன்புநான் கோபப்பட்டபோதெல்லாம்
அவள்சொன்னாள் இதயமேயில்லையென்று
இன்றுநான் கோபத்தையடைக்கியபோது
மருத்துவர்சொன்னார் இதயத்தில்அடைப்பென்று.
நான் சொன்னேன் கோபப்பட்டபோதெல்லாம்
இதயத்தில் ஒன்றுமேவைக்கவில்லை
கோபத்தையடைக்கியபோது எல்லாமே
இதயத்திற்குள் புகுந்ததுபோலும்.
கலங்கியவளைப் பார்த்துச் சொன்னேன்
ஒன்றுநிச்சியம் புரிந்துக்கொள்
கோபப்பட்டபோதும் இப்போதும்
என்னிடத்தில் இதயம் இருக்கின்றது.
ஆனால்உண்மை ஒன்றுஉரைத்திடுவேன்
கோபம் என்பது அமிலமாகும்
வித்தியாசமென்பது அதற்கில்லை
எல்லோரையும் அரித்துச்சிதைத்துவிடும்
No comments:
Post a Comment