முழுமதியின் முகம் பார்க்க
ஆதவன் அடங்கும் நேரம்
காலையில் பள்ளிக்குச் சென்ற
பிள்ளைகளின் வருகையை எண்ணி
அன்னை வாயிலில் காத்திருக்கும்
அழகு தருணம் ...
கணவனின் வருகையை எண்ணி ,
கனவு காணும் மனைவி
ஆயிரம் முறை பார்த்தாலும்
காதலன் கல்லூரி முடிந்து காத்திருக்கும்
காதலியின் மனதிற்கு வருகை தந்து
இன்பமூட்டும் இனிய தருணம்
அலுவலகம் சென்ற அப்பா
அரும்புகளுக்கு ஆசைபொருளை
வாங்கி வரும் அழகு தருணம்
ஆயிரம் கவலைகளோடு
களைபுற்றிருந்தாலும் மனதை
இறகாக்கும் இனிய பொழுது
கவலைகளோடு ஆர்ப்பரிக்கும்
காலைபொழுதை அடக்கி
அமைதியாக்கும் அந்தி மாலைபொழுது ...
கவலைகளோடு விழித்த கண்ணை
கவலையுற்று உறங்க வைக்கும்
இரவை இனிதே வரவேற்கும்
இனிய தருணம்
No comments:
Post a Comment