Wednesday, April 25, 2012

நரைமுடி


காலையில் தலைவாறும்
தருணம் ஏதோ ஒரு சிறு தடுமாற்றம்.

விளக்கை எரியவிட்டு
கண்களை விரித்துப் பார்த்தேன்.

லேசான படபடப்பு.
முகத்திலும் முளைத்தது
வியர்வைத் துளிகள்.

வியர்வையை துடைத்தெறிந்து,
தலை முடிக்குள் விரல்விட்டு,
சிறிது விலக்கி, கண்ணாடியில் பார்த்தால்,
ஆங்காங்கே நரைமுடிகள்.

பதட்டத்திற்கு அர்த்தம் புரிந்து
ஆராய ஆரம்பித்தேன்.

நரைமுடி ஒன்றோ ரெண்டோ அல்ல,
மொத்தமாய் நூறைத் தாண்டும் போல.

நரைமுடிகளே வயதாவதை ஊருக்கு
விளம்பரப் படுத்தும், உச்ச நட்சத்திரங்கள்.

இருந்தாலும் இவைகளை என்
அனுபவங்களின் அட்ச்சானியாய் பார்க்கிறேன்.

நெற்றியில் படரும் நரைமுடிகளை,
என் கல்லூரி அனுபவங்களாய் உணர்கிறேன்.

தலை நடுவில் வீற்றிருந்த
ஒரு கொத்து நரைமுடிகள்,
பலரோடு போட்டி போட்டு
நான் பெற்ற முதல் வேலையை
பறைசாற்றுகிறதோ?

காதோடு கரை புரளும் நரைமுடிகளோ,
காத்திருந்து
கவி பல பாடி,
கண்ணியத்தை நிரூபித்து,
பாசத்தை புரியவைத்து,
நேசம்காட்டி நெகிழவைத்து,
சண்டை சச்சரவு ஏதுமின்றிய
கணத்தை காட்சிபடுத்துகிறதோ?

மாடாக உழைக்காமல்,
ஓடாக தேயாமல்,
எனகென்ற ஒரு வீட்டை,
வங்கி துணைகொண்டு
வாங்கி மகிழ்ந்ததை,
ஒரு சில சிறு நரைமுடிகள்
வாஞ்சையோடு விளங்க
வைக்கின்றனவோ?

வெளிநாட்டு வேலைக்காக
மேற்க்கொண்ட முதல் விமானப் பயணம்.
நான் ஆகாயத்தில் பறக்கும் போது,
நிலத்தில்
நின்று கொண்டே பரந்த
சேதி கேட்டு, கண்ணீரோடு
கர்வமும் எட்டிப் பார்த்த தருணத்தை,
துண்டு நரைமுடிகள்
தம்பட்டம் அடிக்கின்றனவோ?

என்மீது பொறாமை கொண்டு
பல பொல்லாத நரைமுடிகள்
பல்லைக் காட்டியது என் பின்னந்தலையில்?

எதிரிகளே சூழ்ந்திருக்கும் இந்த கலியுகத்தில்.
அறியாமலே நான் சேர்த்த நண்பர் கூட்டம்.
யாருக்கு கிடைக்கும்?
நல்ல நண்பர்களே நம்
வாழ்வாதாரங்கள் என்று அரிய
வைக்கவோ வீற்றிருந்தன
சில நரைமுடிகள்?

இப்படி நம் சாதனைகளை
தினந்தோறும் சிந்துபாட,
சிரம் தாழ்த்தி அமர்ந்திருக்கும்
நரைமுடிகளை வெறும்
புற அழகிற்க்காக மை
கொண்டு கொல்ல வேண்டுமா?

Saturday, April 21, 2012

வெறுப்பின் விளிம்பில்

கற்பனை உலாவில்
கனவுகளை ரசித்தேன்;
சந்தோஷத்தின் நறுமணத்தை
நினைவுகளில் மட்டும் சுவாசித்தேன்;
வலிகளின் இம்சையை
இதய துடிப்பில் உனர்ந்தேன்;
புன்னகையின் உயரத்தை
உதட்டளவில் வைத்தேன்;
உவர்ப்பின் சுவையை
கண்ணீரில் ருசித்தேன்;
தவிப்பின் அழுத்தத்தால்
தினம் தினம் துடித்தேன்;
நிம்மதி பசியால்
நினைவின்றி திரிந்தேன்;
குழப்பங்களின் கூச்சலால்
கனம் தோறும் களங்கினேன்;
உணர்ச்சிகளின் பெருக்கத்தை
உள்ளடக்க நினைக்கிறேன்;
போராட்டங்களை போட்டியிட்டு
பொடிநடை நடந்தேன்;
ஆர்ப்பாட்டங்களின் அரவணைப்பில்
ஆயுள் தேய்கிறேன்;
தவறுகளின் எண்ணிக்கையை
அனுபவத்தில் கழித்தேன்;
அனுபவத்தின் பாடங்களை
மனதோடு தேக்கினேன்;
மனிதன் ஏமாற்றுக்காரன் என்பதை
நாளடைவில் கண்டேன்;
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சோடு சேர்த்தேன்;
வாழ்க்கையின் தொடர்கதையை
என்னிடம் ஒப்படைத்தேன்;
என்னை மட்டும் நம்பி
வாழ்க்கையை வாழ்கிறேன்!!!!!!!

நைட் ஷிபிட்

விடி வெள்ளி முளைக்கும் நேரம் விற்றுகொண்டிருக்கிறேன் தூக்கத்தை வெளிநாட்டிற்கு......

Wednesday, April 11, 2012

நினைத்துப் பாருங்கள்...

உழைப்பும் வெற்றியும் தான்
நம்மை அழகாக்குகிறது....
நம்பிக்கையோடும்
தீர்மானத்தோடும் ஒரு
செயலை செய்யும் போது
வசீகரம் தானாகவே
வந்து சேர்கிறது....
நிறம் அழகின் அடையாளம்
அல்ல....
உழைப்பு தருகிற
வெற்றி
நம்மை மட்டும்
அல்ல....நம்மைச்
சுற்றியும் அழகாக
காண்பிக்கிறது......!

சக மனிதனை
உண்மையாக
நேசிக்கிறபோதும்.... ஆசையோடு
அரவணைக்கும் போதும்
வெளிப்படுகிற அழகை
விட...வேறு
எதுவும்
அழகாய் தெரியல இங்கே....

அன்பு நேர்மை உள்ள
மனசுக்கு சொந்தக்காரர்கள்
எந்த நிறத்தில்
இருந்தாலும் அழகாகவே
இருக்கிறார்கள்....

இது வெறும் தத்துவம் இல்லை.... அப்படி
நினைப்பவர்கள்
நினைத்துப்பாருங்கள்.....

Saturday, April 7, 2012

உலகம் ஒரு நாடக மேடை

வாழ்க்கை என்பது நாடகத் தலைப்பு
வசனம் என்பது வாய்வழிப் பேச்சு

மனதில் வேசங்கள் முக பாவனைகள்
பொய்யான சிரிப்பு உண்மை பகட்டு

உலகம் என்பதே நாடக மேடை
சாகும் வரையிலும் நான் யார் நான் யார் ?

தெரியாமலேயே இறந்து போகிறேன்

எங்கே மனிதர்கள் ?

மனித முகம் தெரிந்தது

ஆனால் எங்கே மனிதர்கள் ?
மிருக குணம் உறுமும் குரல்

அன்பறியா அரக்கத்தனம்.......
எதற்க்காக இப்படி
எல்லோருமே ......

கள்ளென்று பால் நினைப்பார்

கள்ளென்று பால் நினைப்பார்
பாலென்று கள் நினைப்பார்
பாரினில் எதைச் செய்யுனும்
பரிகசித்தே அவர் நடப்பார்
உனக்குச் சரியானதை
உத்தமனே நீ செய்
உலகமே எதிர்த்தாலும்
உன்னை ஒரு நாள் வாழ்த்தும்

Sunday, April 1, 2012

பணிவு எனப் படுவது

பணிவு எனப் படுவது
படிப்பு எனப் படும்

பந்தாவாக இருப்பது
பகட்டு எனப்படும்

அடக்கமாய் இருப்பது
அறிவிலே சிறந்தது

அடங்காமல் திரிவது
உருப்புடாமல் போவது

கடவுள் சிலை

கண் எதிரே
கடவுள்

அன்பு கொண்ட
மனிதன்

கண் எதிரே
கல்

அழகு செய்த
கடவுள் சிலை

கல்லும்....

கண்முன்னே
கிடக்கும் கல்லும்
கடவுளாகிறது.... கஷ்டங்கள்
காலடியில் இருக்கும்
போது...!