Wednesday, April 11, 2012

நினைத்துப் பாருங்கள்...

உழைப்பும் வெற்றியும் தான்
நம்மை அழகாக்குகிறது....
நம்பிக்கையோடும்
தீர்மானத்தோடும் ஒரு
செயலை செய்யும் போது
வசீகரம் தானாகவே
வந்து சேர்கிறது....
நிறம் அழகின் அடையாளம்
அல்ல....
உழைப்பு தருகிற
வெற்றி
நம்மை மட்டும்
அல்ல....நம்மைச்
சுற்றியும் அழகாக
காண்பிக்கிறது......!

சக மனிதனை
உண்மையாக
நேசிக்கிறபோதும்.... ஆசையோடு
அரவணைக்கும் போதும்
வெளிப்படுகிற அழகை
விட...வேறு
எதுவும்
அழகாய் தெரியல இங்கே....

அன்பு நேர்மை உள்ள
மனசுக்கு சொந்தக்காரர்கள்
எந்த நிறத்தில்
இருந்தாலும் அழகாகவே
இருக்கிறார்கள்....

இது வெறும் தத்துவம் இல்லை.... அப்படி
நினைப்பவர்கள்
நினைத்துப்பாருங்கள்.....

No comments:

Post a Comment