இரவும்
பகலும்
இரவு
உழைத்து களைத்த உலகம்
உறங்கிக் களைப்பு நீங்க
எவனோ ஒருவன் போர்த்திவிட்ட
"கருப்புக் கம்பளம் !"
கயவர்களும் கள்வர்களும்
கடமையாற்றக்
காத்திருக்கும் காலம் !
சூரியனைத் தொடர்ந்து
விடியும்வரை நகரும்
"கருநிழல்!"
பகல்
உறங்கும் உயிரினங்களை
ஒட்டுமொத்தமாக எழுப்பிவிட
உதயசூரியன் நீட்டும்
"ஒளிக்கரம் !"
இரவோடு உறவாடி
ஓய்வு கண்ட உலகம்
வயிற்றுக்காகவும்
வசதிக்காகவும்
பாடுபட
எவனோ ஒருவன் அளிக்கும்
"அவகாசக் காலம் !"
சூரியக் கண்ணாடியில்
பூமியின் தோற்றம் !
No comments:
Post a Comment