அறியவேண்டியது....!
தோல்வியைத் தொடர்ந்து
சுமந்தவருக்கு மட்டுமே
வெற்றிவாகனத்தில்
பயணிப்பதன் சுகம் தெரியும் !
துன்பப் பாதையில்
தொடர்ந்து பயணிப்பவருக்கு மட்டுமே
இன்பச் சிம்மாசனத்தில் அமர்ந்ததன்
இதம் தெரியும் !
நிஜம் தெரியாமல்
நிழலில் வாழ்பவருக்கு மட்டுமே
நிஜத்தின் நிழலோடு
வெயிலில் உழைப்பவனின்
உண்மை தெரியும் !
போதும் என்பதற்குமேல் என்பதன்
பொருள் அறிந்தவருக்கு மட்டுமே
"போதும்"என்பதன்
பொருள் தெரியும் !
No comments:
Post a Comment