நல்ல நட்பு வேண்டுமா ?
நல்ல தோழியாய் இரு.
நல்ல கணவன் வேண்டுமா?
நல்ல மனைவியாய் இரு
நல்ல மனைவி வேண்டுமா ?
நல்ல கணவனாய் இரு .
நல்ல காதலன் வேண்டுமா ?
நல்ல காதலியாய் இரு.
நல்ல ஆசிரியர் வேண்டுமா ?
நல்ல மாணவியாய்(னாய்) இரு .
நல்ல தாய், தந்தை வேண்டுமா?
நல்ல பிள்ளையாய் இரு .
நல்ல அரசன் வேண்டுமா ?
நல்ல மக்களாய் இருங்கள் .
நல்ல நாடு வேண்டுமா ?
நாட்டு பற்றுள்ளவர்களாய் இருங்கள்.
நல்லதை செய்யுங்கள்
நல்வழி கிடைக்கும்......
Saturday, January 28, 2012
Wednesday, January 25, 2012
நம்பிக்கை உறுதியாக !
எல்லாவற்றுக்கும் பதில் இருந்தால்
நம்பிக்கை ஒரு போதும் வருவதில்லை !
ஆனால்
எல்லா கேள்விகளுக்கும் தயாராக இருந்தால்
நம்பிக்கை வரும் !
நாம் எப்போதும் உறுதியாக
எதிர் கொள்வோம் உலகத்தை !
"நம்பிகையுடன் உறுதியாக "
நம்பிக்கை ஒரு போதும் வருவதில்லை !
ஆனால்
எல்லா கேள்விகளுக்கும் தயாராக இருந்தால்
நம்பிக்கை வரும் !
நாம் எப்போதும் உறுதியாக
எதிர் கொள்வோம் உலகத்தை !
"நம்பிகையுடன் உறுதியாக "
Tuesday, January 24, 2012
பயணமும் பரிணாமமும்
பயணமும் பரிணாமமும் ஒன்றாகவே பயனிப்பதாய் தோன்றுகிறது
பரிணாமத்தின் சான்றா பயணம்....
பயணத்தின் வேகம் பரிணாமத்தின் அளவுகோலா அல்லது
பரிணாமம் பயணத்தின் வேகத்தால் விளைகிறதா
ஒவ்வொருவனும் பயணத்தில் பரிணாமிக்கிறான்
ஒவ்வொரு பயணத்திலும் பரிணாமிக்கிறான்
பயணியை போலவே பயணமும் பரிணாமிக்கிறது
பயணத்தின் தொடக்கம் மட்டுமே அறிய முடியும்
நாம் பரிணாம பயணத்தில் எங்கிருக்கிறோம் அறிய முடியுமோ
பரிணாமத்தின் சான்றா பயணம்....
பயணத்தின் வேகம் பரிணாமத்தின் அளவுகோலா அல்லது
பரிணாமம் பயணத்தின் வேகத்தால் விளைகிறதா
ஒவ்வொருவனும் பயணத்தில் பரிணாமிக்கிறான்
ஒவ்வொரு பயணத்திலும் பரிணாமிக்கிறான்
பயணியை போலவே பயணமும் பரிணாமிக்கிறது
பயணத்தின் தொடக்கம் மட்டுமே அறிய முடியும்
நாம் பரிணாம பயணத்தில் எங்கிருக்கிறோம் அறிய முடியுமோ
சாமிக்கு படையல்
சாமிக்கு படைத்த படையலில்
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...
வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...
வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.
உண்மை...
பரந்த புல்வெளியில்,
சில்லென்ற பனிக்காற்றில்
கானக்குயிலின் இசையில்
காட்டு செடியின் வாசத்தில்
மல்லாந்து படுத்துக்கொண்டு...
வானத்தில் வட்டமிடும் கழுகை
பார்க்கும் சுகம்....
சொகுசு பங்களாவில் ஏசி ரூமில்
கிடைத்துவிடுமா????
சில்லென்ற பனிக்காற்றில்
கானக்குயிலின் இசையில்
காட்டு செடியின் வாசத்தில்
மல்லாந்து படுத்துக்கொண்டு...
வானத்தில் வட்டமிடும் கழுகை
பார்க்கும் சுகம்....
சொகுசு பங்களாவில் ஏசி ரூமில்
கிடைத்துவிடுமா????
சிக்கல்
இன்பம் இன்பம் என்று கதைக்கிறோம்
இன்னும் இன்னும் என கதைக்கிறோம்..
இன்று போதும் காலை அல்லது மாலை
என்றுவிட்டு மறுபடி எடுத்து பேசுவோம்...
ஏன் எடுக்கவில்லை என திட்டுக்கொடுப்போம்
வாங்குவோம்... பின்னாடி
யார் யாரிடமோ எல்லாம் திட்டு
வாங்கப் போகிறம் என தெரியாமல்...
வேக நாடி நரம்புகளின் வேகத்துக்கு
தடை போடாமல்....
போன் இல் மீதியைப் பார்த்து
வீதியில் அலைகிற தோழனும் உண்டு...
தோழியும் இங்குண்டு.....இதில்
பெற்றோருக்கும் பங்குண்டு.
இன்னும் இன்னும் என கதைக்கிறோம்..
இன்று போதும் காலை அல்லது மாலை
என்றுவிட்டு மறுபடி எடுத்து பேசுவோம்...
ஏன் எடுக்கவில்லை என திட்டுக்கொடுப்போம்
வாங்குவோம்... பின்னாடி
யார் யாரிடமோ எல்லாம் திட்டு
வாங்கப் போகிறம் என தெரியாமல்...
வேக நாடி நரம்புகளின் வேகத்துக்கு
தடை போடாமல்....
போன் இல் மீதியைப் பார்த்து
வீதியில் அலைகிற தோழனும் உண்டு...
தோழியும் இங்குண்டு.....இதில்
பெற்றோருக்கும் பங்குண்டு.
நீ சுயநலவாதியா ...!!
மறக்க
நினைக்கும்போது
வந்து
மன்னிப்பு கேட்கிறாய்
நீ சுயநலவாதியா
இல்லை நான்
கல் நெஞ்சக்காரனா?
நினைக்கும்போது
வந்து
மன்னிப்பு கேட்கிறாய்
நீ சுயநலவாதியா
இல்லை நான்
கல் நெஞ்சக்காரனா?
Sunday, January 22, 2012
எனக்கும் உனக்கும் யார்?
கோடி முறை
கூப்பிட்டு இருப்பேன்
கூட வந்தது
என்னவோ
என் கால்கள்தான்,
என்
பசிக்கும்
பட்டினிக்கும்
பரிமாறியது
என்னவோ
என் கைகள்தான்,
என்
கவலைக்கும் கஷ்டத்திற்கும்
கண்ணீர் வடித்தது
என்னவோ
என் கண்கள்தான்.
எனக்கும் உனக்கும் யார்?
கூப்பிட்டு இருப்பேன்
கூட வந்தது
என்னவோ
என் கால்கள்தான்,
என்
பசிக்கும்
பட்டினிக்கும்
பரிமாறியது
என்னவோ
என் கைகள்தான்,
என்
கவலைக்கும் கஷ்டத்திற்கும்
கண்ணீர் வடித்தது
என்னவோ
என் கண்கள்தான்.
எனக்கும் உனக்கும் யார்?
Saturday, January 21, 2012
மனிதனின் நிலை ...!!!
தேவைகள் பல கண்டு
பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைகொண்டு
நிரந்திரமில்லா இந்த வாழ்வில்
ஆண்டுகள் சில இப்புவியில் ஆண்டு
வாழ்ந்த மனிதன்
மிதக்கிறான் பிணமாய் ..!!!
இரக்கமில்லாமல் வாழ்ந்தவன் ,
தானே இறையாகுகிறான்
மொய்க்கும் ஈகும்
மிதக்கும் மீனுக்கும்
பறக்கும் பறவைக்கும் ...!!!
மனிதனின் நிலை
மிதக்கும் குப்பையுடன்
புனிதத்தின் நிலை
அழுகும் மனிதனுடன் ...!!!
வாழ்வின் நிலை
இதைகாணும் மனிதனின்
மனநிலை போல் ..!!!
உண்மை உணர்ந்தால்
மரணமும் வென்றிடும்..
என்றும்...என்றென்றும்..!!!
பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைகொண்டு
நிரந்திரமில்லா இந்த வாழ்வில்
ஆண்டுகள் சில இப்புவியில் ஆண்டு
வாழ்ந்த மனிதன்
மிதக்கிறான் பிணமாய் ..!!!
இரக்கமில்லாமல் வாழ்ந்தவன் ,
தானே இறையாகுகிறான்
மொய்க்கும் ஈகும்
மிதக்கும் மீனுக்கும்
பறக்கும் பறவைக்கும் ...!!!
மனிதனின் நிலை
மிதக்கும் குப்பையுடன்
புனிதத்தின் நிலை
அழுகும் மனிதனுடன் ...!!!
வாழ்வின் நிலை
இதைகாணும் மனிதனின்
மனநிலை போல் ..!!!
உண்மை உணர்ந்தால்
மரணமும் வென்றிடும்..
என்றும்...என்றென்றும்..!!!
நாளை சூரியன் உதிக்காது
நம்பவில்லை நீ.
எங்கோ இருக்கும் சூரியன் மீதும்
அன்று படித்த அறிவியல் மீதும்
அத்தனை நம்பிக்கை.
இத்தனை நம்பிக்கையில்
ஒரு துளியேனும்
உன் மீதே நீ வைத்தால்
கடவுளும் கோவிலும் தேவையில்லை
இன்று முதல்
நீ சூரியன்!
எங்கோ இருக்கும் சூரியன் மீதும்
அன்று படித்த அறிவியல் மீதும்
அத்தனை நம்பிக்கை.
இத்தனை நம்பிக்கையில்
ஒரு துளியேனும்
உன் மீதே நீ வைத்தால்
கடவுளும் கோவிலும் தேவையில்லை
இன்று முதல்
நீ சூரியன்!
Friday, January 20, 2012
தற்காலிக சாபம்...
தூக்கமில்லாக் கனவுகளும்...
நோக்கமில்லாக் கவிதைகளும்...
வழுக்கிவிழும் வார்த்தைகளும்...
பதுங்கி நிற்கும் பார்வைகளும்...
தற்காலிக சாபமாய்த்
தந்துவிட்டுப் போனாய்...
நோக்கமில்லாக் கவிதைகளும்...
வழுக்கிவிழும் வார்த்தைகளும்...
பதுங்கி நிற்கும் பார்வைகளும்...
தற்காலிக சாபமாய்த்
தந்துவிட்டுப் போனாய்...
பேச துடிக்கிறேன்...
நடப்பின் பிரிவும் வலிக்கும் என்றேன்...
நான் வலி கொடுக்க மாட்டேன் என்றாய் நீ...
ஆனால் இன்று மற்றவர்களை விட அதிக வலியும் வேதனையும் கொடுதது நீ.... உன் நட்பு...
நம் பிரிவுக்கு பிறகு நீ எப்படி இருக்கிறாய்....?
என்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் நான் உடைந்த கண்ணடியகிவிட்டேன்.......
நீ விட்டு சென்ற சுகமான நினைவுகள் என்னை தினம் தினம் வாட்டுகிறது....
ஆல மர வேறை போல இருக்கிறது உன் நட்பு என் இதயத்தில் ...
ஒரே ஒரு முறை பேச துடிக்கிறேன்......
நடக்குமா.....?
நான் வலி கொடுக்க மாட்டேன் என்றாய் நீ...
ஆனால் இன்று மற்றவர்களை விட அதிக வலியும் வேதனையும் கொடுதது நீ.... உன் நட்பு...
நம் பிரிவுக்கு பிறகு நீ எப்படி இருக்கிறாய்....?
என்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் நான் உடைந்த கண்ணடியகிவிட்டேன்.......
நீ விட்டு சென்ற சுகமான நினைவுகள் என்னை தினம் தினம் வாட்டுகிறது....
ஆல மர வேறை போல இருக்கிறது உன் நட்பு என் இதயத்தில் ...
ஒரே ஒரு முறை பேச துடிக்கிறேன்......
நடக்குமா.....?
Thursday, January 19, 2012
இந்த கவிதையில் அர்த்தமே இருக்காது!
கவிதைகள் எல்லாம்
அவனை பற்றியதா?
அவளை பற்றியதா? என்பதைவிட.
காதல் பற்றியதால் என்பதே!
வார்த்தைகளை அடுக்கி விடலாம்,
காதல் உன்னை மடக்கி இருந்தால்!
இலக்கியத்தில் செதுக்கி விடலாம்,
காதலை நீ பதுக்கி இருந்தால்!
பொறாமையில் சில வரிகள் பொறிக்க பெறும்,
ஏக்கத்தில் சில வரிகள் எரிக்க பெறும்,
தேடி திரிந்த வரிகளெல்லாம் தெரிய வரும்,
புரியாத இலக்கணமும் புரிய வரும்,
உனக்கும் கவிதை வரும் என்பது அறிய வரும்!
அவனை பற்றியதா?
அவளை பற்றியதா? என்பதைவிட.
காதல் பற்றியதால் என்பதே!
வார்த்தைகளை அடுக்கி விடலாம்,
காதல் உன்னை மடக்கி இருந்தால்!
இலக்கியத்தில் செதுக்கி விடலாம்,
காதலை நீ பதுக்கி இருந்தால்!
பொறாமையில் சில வரிகள் பொறிக்க பெறும்,
ஏக்கத்தில் சில வரிகள் எரிக்க பெறும்,
தேடி திரிந்த வரிகளெல்லாம் தெரிய வரும்,
புரியாத இலக்கணமும் புரிய வரும்,
உனக்கும் கவிதை வரும் என்பது அறிய வரும்!
ஊர் உணரும்!
தோழா!
நிறைவாகும் வரை மறைவாக இரு...
நிறைவுகளை உரைக்காதே!
நிச்சயம் ஊர் உணரும்
குறைவுகளால் கரையாதே குளித்துவிடு! அழுக்குகள் அகல நீ அழகாவாய்...
உயர பறக்கும் பறவையைப்போல் உரக்க சிந்தனை கொள்! சிறகுகளை விரி...
உயரும் வழியில் உன்னை உயர்த்தும் சிறகுகளை மறக்காதே!
நல்வழியில் செல்! உயிர்களுக்கு துயர் இழைக்காதே!
ஏர் கைக்கொண்டால் இரத்தமும் வேர்வைதான். வாள் கைக்கொண்டால் வேர்வையும் இரத்தம்தான்! இரத்தத்துளி குலைக்கும்! வேர்வைத்துளியே விளைவிக்கும்!
உன்வழி தேர்வு செய்! உண்மை உணர் ! உயர் எண்ணம் வளர்!
உன் காலில் நில்! விவேகம் விதைத்து இடைவிடாது உழைத்து விடு!
உறக்கம் தேவைதான் இமை விழிக்க மறுக்கும்போது!
உழைத்த களைப்பில் நீ உறங்கும்போது... உன் கனவுகள் நனவாகும்!
மயக்கம் தவிர்... துவக்கம் உன்னில்தான்! உன் விழிகளில் மின்னல்தான்!
உன் விழி உலர, உண்மைகள் உணர உள்ளம் உறுதி கொள்ள!
வெற்றிகள் எளிதாகும் வாழ்வே இனிதாகும்! உயர்வு உன்னைச் சேரும் வெற்றி வானம் வசப்படும்!!
Tuesday, January 17, 2012
நம்பிக்கை துரோகம்
உலகில்
நான் சந்திக்கும்
பொய்கள் எல்லாமே
உன்னைத்தான்
நினைவு படுத்துகின்றன
அப்படியென்றால்
இதற்கு பெயர்தான்
நம்பிக்கை துரோகமா?...........................
நான் சந்திக்கும்
பொய்கள் எல்லாமே
உன்னைத்தான்
நினைவு படுத்துகின்றன
அப்படியென்றால்
இதற்கு பெயர்தான்
நம்பிக்கை துரோகமா?...........................
தெரியாது இதுதான் அன்பு என்று
தெரியாது இதுதான் அன்பு என்று
கண் கலங்கி நிற்கும் போது
கை கொடுத்த நட்பை - நான்
நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை..........
துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது
தட்டி கொடுத்த உறவுகளை - நான்
நட்பென்று நினைத்ததும் இல்லை.....
நடந்து செல்லும் பாதை எங்கிலும்
நிழல் போல அருகில் நடந்து வந்து
புன்னகைத்த உள்ளங்களை - நான்
நட்பென்று உணரவில்லை ........
தெரியாது இதுதான் அன்பு என்று
உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்
உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல
உயிரோட்டமான நட்பும்தான் என்று .........
Monday, January 16, 2012
யார் எனக்கு ....
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்.....
தோற்றுப் போனால்
யார் எனக்கு..........
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்.....
தோற்றுப் போனால்
யார் எனக்கு..........
Saturday, January 7, 2012
ஞாபகங்கள்
மனதை அறுத்துப் பார்த்தால்
தெரியும் வடுக்கள் வரிகளாய்...
ஒரு மரத்தைப் போலவே...
மரத்துப் போய்...மறந்து போகாமல்...
தெரியும் வடுக்கள் வரிகளாய்...
ஒரு மரத்தைப் போலவே...
மரத்துப் போய்...மறந்து போகாமல்...
கலைந்த கனவுகள்
வெள்ளி மறைகின்ற வெள்ளன நேரத்தில்
தாமரை நிறைந்த தடாகத்தில் நீராடி
எனை குறு குறு என நோக்கிய குவளையை பறித்து
செவ்வனே அமர்ந்திருக்கும் செந்தூரன் அண்ணனுக்கு
சேவித்தேன் மலர்தூவி அபிசேகித்து
செங்கதிரோன் இளங்கதிரில்
செழுத்த மாந்தோப்பில் நடுவினிலே
கருங்கூந்தலை மெல்ல நீவி விட்டு
அங்கு கான குயிலின் ஓசையுடன்
அவை நாணும் பின்னிசை பாடி
அலைந்து ஓடும் வாய்காலில்
பாதம் வரை நனைந்த நன்னீரில்
அடி அடியாய் அடிவைத்து
வரப்பில் சாய்ந்த சோழக்கதிரை
கொய்து மெல்ல கொறித்து கொண்டே
வானில் சூழ்ந்த முகிலினத்தை
காணில் ஆடும் மயில் கண்டு
தேடி ஓடி படம் பிடித்து
காலில் படர்ந்த கொடி முல்லை
தூக்கி மெல்ல வடம் பிடித்து
அருகில் சேர்ந்த தென்னங்கீற்றில்
அணைத்து மெல்ல சுழலவிட்டேன்
கார்மேகம் கனிந்து சுரந்ததனால்
சில்லென நனைந்தது மேலாடை
தஞ்சம் தந்தது முள் ஓடை
காலில் கீறிய கரு முள்ளால்
பதறி எழுந்தேன் படுக்கையிலே
கதறி அழுதது என் கடிகாரம்
காலம் போவதை அறிவுறுத்தி
கனவுகள் யாவும் கலைந்தன அதன்
நினைவுகள் மட்டும் தூங்கவில்லை
கவி வடிவில் அதை தந்துவிட்டேன்
யாம் பெற்ற இன்பம் இன்று
பெருக இவ்வையகம் என்று
தாமரை நிறைந்த தடாகத்தில் நீராடி
எனை குறு குறு என நோக்கிய குவளையை பறித்து
செவ்வனே அமர்ந்திருக்கும் செந்தூரன் அண்ணனுக்கு
சேவித்தேன் மலர்தூவி அபிசேகித்து
செங்கதிரோன் இளங்கதிரில்
செழுத்த மாந்தோப்பில் நடுவினிலே
கருங்கூந்தலை மெல்ல நீவி விட்டு
அங்கு கான குயிலின் ஓசையுடன்
அவை நாணும் பின்னிசை பாடி
அலைந்து ஓடும் வாய்காலில்
பாதம் வரை நனைந்த நன்னீரில்
அடி அடியாய் அடிவைத்து
வரப்பில் சாய்ந்த சோழக்கதிரை
கொய்து மெல்ல கொறித்து கொண்டே
வானில் சூழ்ந்த முகிலினத்தை
காணில் ஆடும் மயில் கண்டு
தேடி ஓடி படம் பிடித்து
காலில் படர்ந்த கொடி முல்லை
தூக்கி மெல்ல வடம் பிடித்து
அருகில் சேர்ந்த தென்னங்கீற்றில்
அணைத்து மெல்ல சுழலவிட்டேன்
கார்மேகம் கனிந்து சுரந்ததனால்
சில்லென நனைந்தது மேலாடை
தஞ்சம் தந்தது முள் ஓடை
காலில் கீறிய கரு முள்ளால்
பதறி எழுந்தேன் படுக்கையிலே
கதறி அழுதது என் கடிகாரம்
காலம் போவதை அறிவுறுத்தி
கனவுகள் யாவும் கலைந்தன அதன்
நினைவுகள் மட்டும் தூங்கவில்லை
கவி வடிவில் அதை தந்துவிட்டேன்
யாம் பெற்ற இன்பம் இன்று
பெருக இவ்வையகம் என்று
நித்தம் நித்தம்
சில நேரங்களில் வந்து போகும்
பாடல்களின் முணுமுணுப்பு...
எதையோ நினைத்துப் பார்க்கும் போது
உதடுகளில் தன்னிச்சையான சிரிப்பு...
படிக்கும் போது புத்தகம் தாண்டி
ஏதேதோ நினைவுகள்...
தூங்கும் போது புரண்டு படுக்கையில்
போர்வை தேடும் கைகள்...
சிந்தனையின் போது சுருட்டும்
தலை முடியில் விரல்கள்...
நின்று பேசும் போதே
தானே ஆட்டும் கால்கள்...
மழை பெய்யும் போது
சூடான பஜ்ஜியின் நினைவுகளால் ஊறும் எச்சிகள்...
வெய்யில்லின் கொடுமை தாங்காமல்
ஏ.சி. அறையில் தொப்பென்று விழுதல்...
போக வர மேஜை மீது இருக்கும்
பதார்த்தங்களை மென்று கொண்டே பொழுதைப் போக்குதல்...
சாப்பிட்டு முடித்த பின்னும்
தோசையின் முறுகலை மட்டும் பிய்த்த படியே...
வெந்நீரில் குளித்த அலுப்பு தீர
துவட்டும் போது சொருகும் கண்கள்...
அக்கடா என்று உட்காருகையில்
எழுதும் ரெண்டு துக்கடா கவிதைகள்...
எல்லாமே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள்
சுகமான சோம்பேறித்தனங்கள்...
பாடல்களின் முணுமுணுப்பு...
எதையோ நினைத்துப் பார்க்கும் போது
உதடுகளில் தன்னிச்சையான சிரிப்பு...
படிக்கும் போது புத்தகம் தாண்டி
ஏதேதோ நினைவுகள்...
தூங்கும் போது புரண்டு படுக்கையில்
போர்வை தேடும் கைகள்...
சிந்தனையின் போது சுருட்டும்
தலை முடியில் விரல்கள்...
நின்று பேசும் போதே
தானே ஆட்டும் கால்கள்...
மழை பெய்யும் போது
சூடான பஜ்ஜியின் நினைவுகளால் ஊறும் எச்சிகள்...
வெய்யில்லின் கொடுமை தாங்காமல்
ஏ.சி. அறையில் தொப்பென்று விழுதல்...
போக வர மேஜை மீது இருக்கும்
பதார்த்தங்களை மென்று கொண்டே பொழுதைப் போக்குதல்...
சாப்பிட்டு முடித்த பின்னும்
தோசையின் முறுகலை மட்டும் பிய்த்த படியே...
வெந்நீரில் குளித்த அலுப்பு தீர
துவட்டும் போது சொருகும் கண்கள்...
அக்கடா என்று உட்காருகையில்
எழுதும் ரெண்டு துக்கடா கவிதைகள்...
எல்லாமே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள்
சுகமான சோம்பேறித்தனங்கள்...
Tuesday, January 3, 2012
ஒரு மாற்றம் வருமா
ஒரு மாற்றம் வருமா
எத்தனை கடவுள் வந்தாலும்,
எத்தனை மனிதர்கள் வந்தாலும்,
எத்தனை ஆசை வந்தாலும்,
எத்தனை அன்பு வந்தாலும்,
எத்தனை இழப்பு வந்தாலும்,
எத்தனை உலகம் வந்தாலும்,
எத்தனை உயிர் வந்தாலும்,
எத்தனை அரசு வந்தாலும்,
எத்தனை உறவு வந்தாலும்,
எத்தனை காலம் வந்தாலும்,
எத்தனை விதி வந்தாலும்,
எத்தனை ஜென்மம் வந்தாலும்…
இது போல் எத்தனை வந்தாலும்,
மனிதர்களின் குணங்கள் மட்டும்'
மாறவே மாறாது',
இயல்பான குணகளை சொல்லுகிறேன்,
இதை எப்படி சொல்லுவது….
உனக்கு' புரிய கூடிய, அறியகூடிய
வார்த்தைகள்' புரிந்தால்...
[காலங்களினால் ஏற்படும் மனிதர்களின் மாற்றம்]
புரிகிறதா '''''''புரிந்தால் ''''''''''''எனக்கு மகிழ்ச்சி…………..
நான் சொல்லி என்ன ஆகுவது,
இதை' விதி என்று நினைத்தால் உன்னுள் சிந்தனை எழுகிறது, நினைத்து பார்…ஒரு மற்றம் உருவாகுமா நம்முள் புது மாற்றம்……..நன்மை ஒன்று உருவாகி விட்டாள் தீமை ஒன்று உருவகிவிடுமா ……????? அது ஏன்…
பதினாறு சொந்தங்கள் ...!
பதினாறு சொந்தங்களும்
பரிமாறும் தருணம் - இதோ
காற்றின் மூச்சில் கைகள்
கோர்க்கும் தாலி
முதல் சொந்தம்
கட்டை விரல் அருகில்
மெட்டி சத்தம்
இரண்டாம் சொந்தம்
பொன் மான் கழுத்திலே
புத்தாடை மோகத்தில்
மாலை மாற்றும்
மூன்றாம் சொந்தம்
ஒளி விடும் கருவியின்
முன் படம் பிடிக்கும்
நாணத்தில் சிவக்கும் வெக்கம்
நான்காம் சொந்தம்
ஐவிரல் கோர்த்து
அக்கினி வளம் வருவது
ஐந்தாம் சொந்தம்
பாலும் பழமும்
பகிர்ந்துண்ணும்
பாசம் ஆறாம் சொந்தம்
தன் வீடு விட்டு
பெண் வீடு செல்லும்
மறு வீடு ஏழாம் சொந்தம்
எட்டு வைத்து நெற்றி
பொட்டு வைத்த வாசலில்
நிறை நாழி கால் தட்டுவது
எட்டாம் சொந்தம்
வகிறார உண்ட பின்
வாயாடும் நலுங்கில்
நயம் பிறக்கும் புன்னகையில்
ஒன்பதாம் சொந்தம்
நீ வேறு நான் வேறு
என்றில்லாமல்
நாம் ஒன்றே என்றது
பத்தாம் சொந்தம்
பத்தும் சொத்தாகும்
பருவங்கள் கூடும்
கட்டில் பந்தம்
பதினொன்றாம் சொந்தம்
முப்பதும் அறுபதும்
முடிந்த பின் முழு
நிலவாய் வளரும் குழந்தை
பன்னிரெண்டாம் சொந்தம்
பன்னிரெண்டு ராசிகளையும்
பதபடுத்தும் பக்குவமும்
பொறுமையும் கடமையும்
பதிமூன்றாம் சொந்தம்
பால் வாடை பெற்ற பின்
மேலாடை அலங்கரிக்கும்
தாய் மாமன்
பதினான்காம் சொந்தம்
வரவு செலவு வாழ்க்கையில்
வறுமை போக்கி
பெருமை காண்பது
பதினைந்தாம் சொந்தம்
இவை எல்லா சொந்தங்களையும்
பெற்ற பின் தங்கள்
ஆயுள் காலத்தை
அதிகரிக்கும் தலைமுறை சொந்தமே
பதினாறாம் சொந்தம்
பரிமாறும் தருணம் - இதோ
காற்றின் மூச்சில் கைகள்
கோர்க்கும் தாலி
முதல் சொந்தம்
கட்டை விரல் அருகில்
மெட்டி சத்தம்
இரண்டாம் சொந்தம்
பொன் மான் கழுத்திலே
புத்தாடை மோகத்தில்
மாலை மாற்றும்
மூன்றாம் சொந்தம்
ஒளி விடும் கருவியின்
முன் படம் பிடிக்கும்
நாணத்தில் சிவக்கும் வெக்கம்
நான்காம் சொந்தம்
ஐவிரல் கோர்த்து
அக்கினி வளம் வருவது
ஐந்தாம் சொந்தம்
பாலும் பழமும்
பகிர்ந்துண்ணும்
பாசம் ஆறாம் சொந்தம்
தன் வீடு விட்டு
பெண் வீடு செல்லும்
மறு வீடு ஏழாம் சொந்தம்
எட்டு வைத்து நெற்றி
பொட்டு வைத்த வாசலில்
நிறை நாழி கால் தட்டுவது
எட்டாம் சொந்தம்
வகிறார உண்ட பின்
வாயாடும் நலுங்கில்
நயம் பிறக்கும் புன்னகையில்
ஒன்பதாம் சொந்தம்
நீ வேறு நான் வேறு
என்றில்லாமல்
நாம் ஒன்றே என்றது
பத்தாம் சொந்தம்
பத்தும் சொத்தாகும்
பருவங்கள் கூடும்
கட்டில் பந்தம்
பதினொன்றாம் சொந்தம்
முப்பதும் அறுபதும்
முடிந்த பின் முழு
நிலவாய் வளரும் குழந்தை
பன்னிரெண்டாம் சொந்தம்
பன்னிரெண்டு ராசிகளையும்
பதபடுத்தும் பக்குவமும்
பொறுமையும் கடமையும்
பதிமூன்றாம் சொந்தம்
பால் வாடை பெற்ற பின்
மேலாடை அலங்கரிக்கும்
தாய் மாமன்
பதினான்காம் சொந்தம்
வரவு செலவு வாழ்க்கையில்
வறுமை போக்கி
பெருமை காண்பது
பதினைந்தாம் சொந்தம்
இவை எல்லா சொந்தங்களையும்
பெற்ற பின் தங்கள்
ஆயுள் காலத்தை
அதிகரிக்கும் தலைமுறை சொந்தமே
பதினாறாம் சொந்தம்
இருதுருவம்
பிறருக்காக
தன்னையே
அர்பனிப்பவன் தியாகி!
தனக்காக பிறரை
அர்ப்பனிப்பவன்
கெட்ட அரசியல்வாதி!
ஆனால்...
இருவர் எண்ணமும்
மக்களை நோக்கியே.....
தன்னையே
அர்பனிப்பவன் தியாகி!
தனக்காக பிறரை
அர்ப்பனிப்பவன்
கெட்ட அரசியல்வாதி!
ஆனால்...
இருவர் எண்ணமும்
மக்களை நோக்கியே.....
சோகம் பகிரும் நண்பன் ....
என் தலையணைகள்
தொட்டு தினமும்
சோதித்து பார்க்கிறேன்...
இரவு பகிர்ந்த சோகத்தின்
சுவடு எங்கேனும்
ஓட்டி இருக்கிறா என...
இதயம் கீறிய சோகங்கள்
கண்கள் வழி கண்ணீராக
வடிந்து கரைகிறது தலையணைக்குள்..
ஆயிரம் சோகம் பகிர்ந்த
ஆத்மார்த்த நண்பனாய் எனக்கு
என் தலையணைகள்...
ஒவ்வோர் விடியலுக்கு பி்ன்னும்
என தலையணையை உலர
வைக்கிறேன் சிறிது நேரம்...
அன்றைய இரவின் சோகத்தை
சுமக்க அதனுள் இடம்
தயார் படுத்த வேண்டுமல்லவா...
அத்தனை ரகசியத்தையும் காக்கும்
உற்ற நண்பனாய் தலையணை
கண்ணீர் கரைக்கிறது நித்தமும்...
ஆனமட்டும் தலையணையின் அணைப்பில்
உறங்குகிறேன் சுமந்து வைத்த
சோகத்தை வடித்து வைக்க...
Subscribe to:
Comments (Atom)