Thursday, January 19, 2012

இந்த கவிதையில் அர்த்தமே இருக்காது!

கவிதைகள் எல்லாம்
அவனை பற்றியதா?
அவளை பற்றியதா? என்பதைவிட.
காதல் பற்றியதால் என்பதே!

வார்த்தைகளை அடுக்கி விடலாம்,
காதல் உன்னை மடக்கி இருந்தால்!
இலக்கியத்தில் செதுக்கி விடலாம்,
காதலை நீ பதுக்கி இருந்தால்!

பொறாமையில் சில வரிகள் பொறிக்க பெறும்,
ஏக்கத்தில் சில வரிகள் எரிக்க பெறும்,
தேடி திரிந்த வரிகளெல்லாம் தெரிய வரும்,
புரியாத இலக்கணமும் புரிய வரும்,
உனக்கும் கவிதை வரும் என்பது அறிய வரும்!

No comments:

Post a Comment