Tuesday, January 17, 2012

தெரியாது இதுதான் அன்பு என்று



தெரியாது இதுதான் அன்பு என்று

கண் கலங்கி நிற்கும் போது

கை கொடுத்த நட்பை - நான்

நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை..........

துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது

தட்டி கொடுத்த உறவுகளை - நான்

நட்பென்று நினைத்ததும் இல்லை.....


நடந்து செல்லும் பாதை எங்கிலும்

நிழல் போல அருகில் நடந்து வந்து

புன்னகைத்த உள்ளங்களை - நான்

நட்பென்று உணரவில்லை ........

தெரியாது இதுதான் அன்பு என்று

உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்

உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல

உயிரோட்டமான நட்பும்தான் என்று .........

No comments:

Post a Comment