Tuesday, January 24, 2012

சாமிக்கு படையல்

சாமிக்கு படைத்த படையலில்
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...

வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.

No comments:

Post a Comment