தேவைகள் பல கண்டு
பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைகொண்டு
நிரந்திரமில்லா இந்த வாழ்வில்
ஆண்டுகள் சில இப்புவியில் ஆண்டு
வாழ்ந்த மனிதன்
மிதக்கிறான் பிணமாய் ..!!!
இரக்கமில்லாமல் வாழ்ந்தவன் ,
தானே இறையாகுகிறான்
மொய்க்கும் ஈகும்
மிதக்கும் மீனுக்கும்
பறக்கும் பறவைக்கும் ...!!!
மனிதனின் நிலை
மிதக்கும் குப்பையுடன்
புனிதத்தின் நிலை
அழுகும் மனிதனுடன் ...!!!
வாழ்வின் நிலை
இதைகாணும் மனிதனின்
மனநிலை போல் ..!!!
உண்மை உணர்ந்தால்
மரணமும் வென்றிடும்..
என்றும்...என்றென்றும்..!!!
No comments:
Post a Comment