Sunday, December 25, 2011

தனிமை ...!!

இரவின் நிலவும்
இவளும் ஒன்றோ ..!!
தனிமையில் வாழு(டு)ம்
இளம் கன்றோ??!!

எத்தனை ஏக்கங்கள்
இந்த கண்ணில்
இதை கண்டும்
இறக்கம் இல்லையோ
உந்தன் நெஞ்சில் ??!!

கரு சுமந்த
உரு தெரியாமல்,
தெரு ஓரமாய்
ஒரு வேளை பசிக்கு
மருகி, விதிக்கு
கருகி ..உதிரும் இந்த
மொட்டுக்கள்
எத்தனை ..எத்தனை..!!!
இதில்
ஒன்றேனும் உன் பார்வைக்கு விழவில்லையோ ??!!!
இல்லை
உனக்கு பார்வையே இல்லையோ??!!

எறும்புகள் கூட
கூடித்தான் வாழுகின்றன ..
காக்கைகள் கூட
பகிர்ந்துதான் உண்ணுகின்றன ..

மனிதா
உன் வீட்டு தோட்டத்தில்
பூத்த பூ இது !!
அதை
நீ வாட விடுவது ஏது??

வாழ்வதை விட
வாழவைதுப் பார்
கடவுள்
உன்னுள் தோன்றுவார்
நீ செல்லும் பாதையில்
மலராய் மாறுவார்
என்றும்....என்றென்றும்....

No comments:

Post a Comment