Tuesday, December 13, 2011

வெளிச்சம் வேண்டும்

விளக்கும் அற்ற-ஒரு
வீட்டுக்குள்
விழுந்து கிடக்கிறேன்
விதியோ இல்லை
நான் கொண்ட
மதியோ
அதனை மதிப்பிடக்கூட
எனக்கு மதி
போதவில்லை
விதி தான் என்னை
விழ
வைத்தது
விளையாட்டாம் அதற்கு
என்னுடன் எதற்கு
வீண் வம்பு
விளகிச்செல்லாமல்
வீராப்பாய்
விலை பேசுகிறது
என் என்னை
எதற்கு
என்று நான் அறியேன்............

இருட்டறையில்
ஈ கூட
இல்லை
இந்த ஏழை
இருதயம் மட்டும்
இளக்காரம் போலும்
இம்சைப் படுகிறேன்
அஹிம்சை அற்ற
இருளே
அகன்று விடு
முதலில் என்னைக்கட்டி
அடுத்ததாய் என் கண்ணைக் கட்டி
இன்னும் என் உயிரைக்கட்டப்போலும்
உன் உத்தேசம்,
உயிர்தேளும்வரை நான்
ஒரு
உருவற்ற
உடல் தான்- நான்
உயிர் பெற்றுவருவேன்
ஒரு நாள்
என் யாகம்
பலித்து விட்டால்.........

No comments:

Post a Comment