Tuesday, December 20, 2011

கடவுள் எங்கே?

ஆன்மீகவாதியைக் கேள்,
விண்வெளியைச் சுட்டுவார்,
கண்ணுக்குத் கடவுள் தெரிவதுண்டோ!
கோவிலைக் காட்டுவார்,
கோவிலில் சிலைகள் மட்டுமே உண்டு;

பூமியில் மனிதரில்
காணாத கடவுளையா
விண்வெளியில், கோவிலில்
காண்போம்!

அன்பு கொண்டவர் மனத்திலும்
மனிதாபிமானம் உள்ளோரிடமும்
கள்ளமில்லா குழந்தைகளிடமும்
பார் தெரியும்.

No comments:

Post a Comment