Sunday, December 25, 2011

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் மனிதநேயம்...

பச்சை தண்ணீருக்கும்
விலை சொல்லிடுகையில்
மனிதனின் மனதில்
எங்கே பார்த்திட
இரக்கமென்னும் நீரை...

மனிதன் இயக்கி வந்த
காலம் புதைந்து - இன்று
மனிதனை இயக்கும்
இயந்திரங்கள்...

கேட்டால் போட்டி உலகம்.
மனிதம் மறந்து,
நியாயம் புதைத்து,
அதன் மேல் ஓடி
வெற்றிக் கொடி நாட்ட,
யாருண்டு பாராட்ட...

கிராம் கணக்கில்
உதவி எதிர்பார்த்திட,
தங்கம் அளவு விலை....

அக்றினை யாவும்
பிறந்த பலனாய் உதவிட,
மனிதன் மட்டும்
ஏனோ மறந்துபோனான்
மனிதம் செய்திட...

பணம் காசு சேர்ப்பதோடு
நாலு நல்ல மனங்களையும்
சேர்த்து வையுங்கள் பத்திரமாய்...

பணத்திற்கு தரும் மதிப்பை
மனதிற்கும் கொடுத்து.
முடிவில் சேருமிடம்
கொண்டு செல்ல வேண்டி...

சின்னதாய் வேண்டுகோள்...
அழிந்து போன பட்டியலில்
மனித நேயத்தையும்
சேர்த்து விடாதீர்கள்...

No comments:

Post a Comment