Friday, December 23, 2011

காலம் மீது வைத்த காதல் கண்ணீராய் போனது????

எதிர் பார்த்த வாழ்க்கை கனவிலாவது நிறைவேறதா என்ற ஏக்கம்.,ஏற்றம் பெரும் நாள் வராதா என்று ஏமாற்றம் அடைகிறேன் .,எதிர் பார்த்த வாழ்க்கை எதிரிலையே கரைகிறது.,கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது வெறும் நான் கடந்து வந்த சுவடுகள் மட்டும்தான் தென்படுகிறது அந்த பாதையும் வெறிசோடி கிடைகிறது..,காரணம் சொல்ல முடியவில்லை..,காரியம் சாதிக்க முடியவில்லை..,ஏங்கித் தவித்தது போதும் என்றிருந்தேன்.., ஓங்கி அடிக்கிறது இந்த சமுதாயம்..,
காலம் கடந்து வந்தாலும் காயங்கள் மறையவில்லை.,காகிதமாகி ப்போன என் வாழ்க்கையில் எழுத்துப்பிழைகள் ஏராளம்.,அர்த்தம் புரியாத இந்த வாழ்க்கையால் சற்று ஆடித்தான் போனேன் .,இயற்க்கை தந்த இந்த வாழ்க்கையை நல்ல முறையில் இயக்கிதான் பார்க்க முடியவில்லை..,முடிந்தவரை முயற்சிக்கிறேன்..,முடிவு காண முயலுகிறேன் ..,தவிப்போடு விடைப்பெறுகிறேன்

No comments:

Post a Comment