என் சிரிப்பைப்
பார்த்ததும் என்னைப்
"பைத்தியம்" என்றார்கள் !
என் அழுகையைக்
கண்டதும் என்னை
"அழுமூஞ்சி" என்றார்கள் !
எதிர்த்துக் கேட்கையில்
என்னைத் "திமிர் பிடித்தவன்"
என்றார்கள் !
பாராட்டிப் பேசுகையில்
என்னைப் "பச்சோந்தி"
என்றார்கள்.
குற்றத்தைச்
சொல்லும்போது
என்னைத் "துரோகி"
என்றார்கள் !
எல்லாவற்றிற்கும்
தலையசைத்தபோது
என்னை "நல்லவன்"
என்றார்கள் !!
இன்றைய உலகம் இது தானோ???
No comments:
Post a Comment