Saturday, December 31, 2011

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்


தோழ்விகளை முதலீடு செய்
வெற்றிகள் லாபம் ஆகும்

சோகங்களை கண்ணில் இடு
கண்ணீரில் கரைந்து விடும்

சந்தோசங்களை உதட்டில் சேர்
புண்கையில் வாழ்க்கை வரமாகும்

மதங்களை அன்பில் இனை
தெய்வங்கள் உன்னிலும் தெரியும்

இயற்கையை காத்து பார்
சமநிலை உன்னிலும் வரும்

லட்சியத்தை முதலில் தேடு
தன்னம்பிக்கை உனை அழைக்கும்

வீட்டினை கடந்து வா
வாழ்க்கையை அனுபவிக்க தோன்றும்

இளமையில் தூக்கத்தை கலை
நட்பும் காதலும் சொர்க்கத்தை காட்டும்

ஒரு புண்ணைகை வீசு
ஓராயிரம் மனிதர்கள் சேரும்

எண்ணங்களில் தூய்மாய் இரு
எதிர்பாரத சந்தோசங்கள் காண்பாய்

மலர்ந்திடும் வருடம் எம்
அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்

உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த
புது வருட நல் வாழ்த்துக்கள்

Tuesday, December 27, 2011

இந்த உலகில எங்க தப்புநடக்கிறது தெரியுமா?

தப்பு பண்ணுரவநெல்லாம் ஜெய்ப்பம் என்று உறுதியோட செயல்படுறாங்க,
நல்லது பண்ணுரவநெல்லாம் தோத்திடுவமோ என்று தயங்குறாங்க.

உயர்ந்தவன்

ஒரு ஆயிரம் தீவிரவாதிகளை
தூக்கில் இடுபவனைவிட
ஒரு
அனாதையை அணைக்கும் உள்ளம்தான் உயர்ந்தவன்👌

Sunday, December 25, 2011

"நல்லவன்"

என் சிரிப்பைப்
பார்த்ததும் என்னைப்
"பைத்தியம்" என்றார்கள் !

என் அழுகையைக்
கண்டதும் என்னை
"அழுமூஞ்சி" என்றார்கள் !

எதிர்த்துக் கேட்கையில்
என்னைத் "திமிர் பிடித்தவன்"
என்றார்கள் !

பாராட்டிப் பேசுகையில்
என்னைப் "பச்சோந்தி"
என்றார்கள்.

குற்றத்தைச்
சொல்லும்போது
என்னைத் "துரோகி"
என்றார்கள் !

எல்லாவற்றிற்கும்
தலையசைத்தபோது
என்னை "நல்லவன்"
என்றார்கள் !!

இன்றைய உலகம் இது தானோ???

தனிமை ...!!

இரவின் நிலவும்
இவளும் ஒன்றோ ..!!
தனிமையில் வாழு(டு)ம்
இளம் கன்றோ??!!

எத்தனை ஏக்கங்கள்
இந்த கண்ணில்
இதை கண்டும்
இறக்கம் இல்லையோ
உந்தன் நெஞ்சில் ??!!

கரு சுமந்த
உரு தெரியாமல்,
தெரு ஓரமாய்
ஒரு வேளை பசிக்கு
மருகி, விதிக்கு
கருகி ..உதிரும் இந்த
மொட்டுக்கள்
எத்தனை ..எத்தனை..!!!
இதில்
ஒன்றேனும் உன் பார்வைக்கு விழவில்லையோ ??!!!
இல்லை
உனக்கு பார்வையே இல்லையோ??!!

எறும்புகள் கூட
கூடித்தான் வாழுகின்றன ..
காக்கைகள் கூட
பகிர்ந்துதான் உண்ணுகின்றன ..

மனிதா
உன் வீட்டு தோட்டத்தில்
பூத்த பூ இது !!
அதை
நீ வாட விடுவது ஏது??

வாழ்வதை விட
வாழவைதுப் பார்
கடவுள்
உன்னுள் தோன்றுவார்
நீ செல்லும் பாதையில்
மலராய் மாறுவார்
என்றும்....என்றென்றும்....

வேண்டிடும் பழைய வாழ்க்கை...

இயந்திரதனமற்ற இயல்பு உலகம்.
நிலவொளியின் முற்றத்தின் உறக்கம்.
வாஞ்சனையான விசாரிப்புகள்.
பொய் வேசமிடாத புன்னகை.
அரட்டைகள் அரங்கேறும் திண்ணை.
மண் வாசனை துணைகொண்ட மழை.
கண்டிப்பான பாசம் - பாசக் கண்டிப்பு.
பொய்கூற வைக்கா அலைபேசி.
கணினி இல்லா சுதந்திர மனிதன்.
கூட்டுக் குடும்பத்தின் கூட்டாஞ்சோறு.
சுற்றம் அறிமுகம் கொண்ட தோழமை.
பிரதிபலன் பார்க்கா பங்காளிகள்.
பெரும் கதை கொண்ட ஒத்தையடிப் பாதை.
நினைவுகளை மெல்ல அசை போடும் மாட்டு வண்டிப் பயணம்.
அடுத்த ஊருக்கு மணக்கும் கை பக்குவமான சமையல்.
உடலோடு உள்ளமும் பசியடங்கும் உபசரிப்பு.
உள்ளத்தில் வரும் வெளிப்படைப் பேச்சு.
வெள்ளந்தி மனிதர்களின் விசாரிப்பு கரிசனம்.
எழுத்துகள் தாங்கிய ஏக்க கடிதங்கள்.
ஊருக்கு பயந்த படபட காதல்.
தினம் தோறும் குரங்குகளின் சிறப்பு வருகை.
அவர்களை எதிர்கொள்ள தயாராக நிற்கும் நன்றி மறவா ஐந்தறிவு யீவன்.
அலார கூச்சலற்ற சேவல் சத்தம்.
அதனுடன் கூடிய குயிலோசை.
குளத்தங்கரை வேப்ப மரம்.
மனிதனை மனிதனாய் பார்த்த மனிதம்.

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் மனிதநேயம்...

பச்சை தண்ணீருக்கும்
விலை சொல்லிடுகையில்
மனிதனின் மனதில்
எங்கே பார்த்திட
இரக்கமென்னும் நீரை...

மனிதன் இயக்கி வந்த
காலம் புதைந்து - இன்று
மனிதனை இயக்கும்
இயந்திரங்கள்...

கேட்டால் போட்டி உலகம்.
மனிதம் மறந்து,
நியாயம் புதைத்து,
அதன் மேல் ஓடி
வெற்றிக் கொடி நாட்ட,
யாருண்டு பாராட்ட...

கிராம் கணக்கில்
உதவி எதிர்பார்த்திட,
தங்கம் அளவு விலை....

அக்றினை யாவும்
பிறந்த பலனாய் உதவிட,
மனிதன் மட்டும்
ஏனோ மறந்துபோனான்
மனிதம் செய்திட...

பணம் காசு சேர்ப்பதோடு
நாலு நல்ல மனங்களையும்
சேர்த்து வையுங்கள் பத்திரமாய்...

பணத்திற்கு தரும் மதிப்பை
மனதிற்கும் கொடுத்து.
முடிவில் சேருமிடம்
கொண்டு செல்ல வேண்டி...

சின்னதாய் வேண்டுகோள்...
அழிந்து போன பட்டியலில்
மனித நேயத்தையும்
சேர்த்து விடாதீர்கள்...

Friday, December 23, 2011

காலம் மீது வைத்த காதல் கண்ணீராய் போனது????

எதிர் பார்த்த வாழ்க்கை கனவிலாவது நிறைவேறதா என்ற ஏக்கம்.,ஏற்றம் பெரும் நாள் வராதா என்று ஏமாற்றம் அடைகிறேன் .,எதிர் பார்த்த வாழ்க்கை எதிரிலையே கரைகிறது.,கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது வெறும் நான் கடந்து வந்த சுவடுகள் மட்டும்தான் தென்படுகிறது அந்த பாதையும் வெறிசோடி கிடைகிறது..,காரணம் சொல்ல முடியவில்லை..,காரியம் சாதிக்க முடியவில்லை..,ஏங்கித் தவித்தது போதும் என்றிருந்தேன்.., ஓங்கி அடிக்கிறது இந்த சமுதாயம்..,
காலம் கடந்து வந்தாலும் காயங்கள் மறையவில்லை.,காகிதமாகி ப்போன என் வாழ்க்கையில் எழுத்துப்பிழைகள் ஏராளம்.,அர்த்தம் புரியாத இந்த வாழ்க்கையால் சற்று ஆடித்தான் போனேன் .,இயற்க்கை தந்த இந்த வாழ்க்கையை நல்ல முறையில் இயக்கிதான் பார்க்க முடியவில்லை..,முடிந்தவரை முயற்சிக்கிறேன்..,முடிவு காண முயலுகிறேன் ..,தவிப்போடு விடைப்பெறுகிறேன்

வேதனை

மனித இதயம் - ஒரு வெள்ளை காகிதம் போன்றது...
கவிதை எழுதியவர்களை விட அதை
கசக்கி எறிந்தவர்கள் தான் அதிகம் ...

எதிர்பார்ப்பு

அன்பு, பாசம், அக்கறை.. இவை அனைத்தும்
எதிர் பார்க்காத நேரத்தில் , எதிர் பார்க்காத நபர் மூலம் கிடைத்தால்
அதற்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்க முடியாது ...

Thursday, December 22, 2011

புத்தக விலை

தனிமையை தவிர்க்க
என்னையே
நேசிக்கத்தொடங்கினேன்
''புத்தகமாய்''
விலைபோகும்
அளவுக்கு.....

கிராமத்துக்காரன்

அழுக்குப் பிடித்த
அரைக் கால் சட்டையோடு
ஆனந்தமாய்ச் சுற்றித் திரியும்
குழந்தைகள் பார்க்கையில்...!

களை பிடுங்கிய களைப்பாறி
வயல்வெளியில் வட்டமாய் உட்கார்ந்து
ஊர்க்கதைகளோடு உணவையும் பரிமாறும்
பெண்கள் பார்க்கையில் ...!!!

ஆல மரத்தடியில்
அகலத் துணி விரித்து
அண்ணாந்து படுத்திருக்கும்
அண்ணாச்சிகள் பார்க்கும் போதும் ..!!!

மச்சான் மாப்ளே
மாமியா நாத்துனா கொழுந்தனா
ஆத்தா அப்பச்சி அம்மாச்சி
அத்தனை சொந்தங்கள் பார்க்கும் போதும் ..!!!

வெற்றிலை மென்று கொண்டே
முற்றம் அமர்ந்து முன்னூறு கதைகள்
முப்பொழுதும் சொல்லும்
கிழவிகள் பார்க்கையில் ..!!!

பசி தீர்ந்தால் போதும்
பாசம் இருந்தால் போதும்
பணம் எதற்கெனப் பாடும்
மனங்கள் பார்க்கும் போதும் ...!!!

பச்சை மரங்கள் பார்க்கையில்
பாடும் பட்சிகள் பார்க்கையில்
வயல் பாயும் வாய்க்கால் பார்க்கையில்
வளையோடும் நண்டு பார்க்கையில்
அலையோடும் குளம் பார்க்கையில்...!!

சின்ன அறைக்குள் சிக்கி
நகரத்தின் வீதிகளில்
நசுங்கித் திரியுமெனக்கு
ஏன் படித்தோம் எனத் தோன்றும்
மனம் வலிக்க அழத் தோன்றும்
விவசாயமே செய்திருக்கலாமென்று
விசும்பத் தோன்றும்...!!!

செய்யும் விளம்பரம் உண்மையில்லை
இதழின் சிரிப்பில் உண்மையில்லை
எங்கும் பணம் பணம்
எங்கிருக்கிறது மனம் மனம் ...!

அலுவலகக் கோப்புகளை
ஆனந்தமாய் மறந்து விட்டு
அடுக்குமாடி கட்டிடத்தை
அப்படியே விட்டுவிட்டு
ஊர் சென்று உலாவ
தீபாவளி பொங்கலை
ஆவலோடு நோக்கும் மனசு ...!!!

ஒவ்வொரு கிராமமும்
ஒரு அழகான கவிதை
அங்கே எழுதுக்களாய்ப்
பிறக்க எல்லோருக்கும் பிடிக்கும்...!!!

கம்ப்யூட்டர் முன்
கன்னத்தில் கரம் வைத்து
அடுத்த அரசினர் விடுமுறையை
ஆவலாய் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் இவனுமொரு
கிராமத்துக்காரன் ...!!!

மனிதர்கள்

மலரும் மௌனத்தையும்,
போலியான சிரிப்பையும்,
ரகசிய அந்தரங்க விம்மலையும்,
உணர்ச்சியில்லா தூக்கதையும்
உண்மையான பொய்மையும்
பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி வெறுமையிலே
மனம் மரத்துப் காய்ந்த
பின்னும் உள்ளம் வெம்பி
நிற்க வைக்கும் பழி சொல்லும்
உலகமிது...

பேசப் பழகு

பால் திரிந்தால் மோராகும்
சொல் திரிந்தால் விஷமாகும்
திரியாமல் நீ பாத்துக்கோ
திருத்தமா பேச பழகிக்கோ

Wednesday, December 21, 2011

"மனிதனா மிருகமா"

மதத்திற்கே மதம் பிடிக்கும்
அளவிற்கு மதம் பிடித்திருக்கும்
மனிதனைவிட..,
மதம் பிடித்தாலும் தன் கோவத்தை
தன் இனத்தின்மேல் காட்டாமல்
தன் இடத்தின்மேல் காட்டும்
யானையே எனக்கு மேல்......

தன் வீடு தன் மக்கள் தன் குடும்பம்
என வாழும் சுய நலக்காரனை விட
பாதித்தீனி கிடைத்தாலும் பகிர்ந்துண்டு
வாழும் காகமே எனக்கு மேல்.......

குழந்தையை பாரமென்று எண்ணி
கால் ஊனமுடியா வயதிலேயே
கான்வென்ட்டுக்கு அனுப்பி வைக்கும்
மனிதனைவிட.....,
கால் வளர்ந்தபின்னும்
தன் குழந்தையை வயித்திலே சுமக்கும்
கங்காருவே எனக்கு மேல்.......

மனிதநேயத்தோடு மனசார
சோறு போடுவான் ஒருத்தன்,
உண்ட உப்பு உரைக்கும் முன்னரே
உணவு போட்டவனையே
போடுவான்(அடி,வெட்டு) இன்னொருத்தன்,
இவர்களைவிட.....,
ஒருமுறை ஒருபொறை(வருக்கி) போட்டால்
ஒருவாரம் வீட்டு வாசலில் கெடக்கும்
நாயே எனக்குமேல்.......

மனம் அடிக்கடி அடிக்கு அடி மாறுது,
போதை தலைக்கு ஏறுது,

நேருக்கு நேர் மார் ஓடுது,
நேர்மையில்லாமல் வாடுது,

கண்கள் கண்ணீரால் தளும்புது,
அதுவா இதுவா என புலம்புது,

அதையும் இதையும் தேடி போவுது,
அங்க இங்கன்னு தாவுது,
தாவித்தாவி காலெல்லாம் நோவுது,
கடைசியில எல்லாத்தையும் இழந்து சாவுது...!

=========================================
மேற்படி பார்க்கப்போனால் மனிதனைவிட
மிருங்கங்கள் மதிக்கபடுபவையாக உள்ளன
ஆதலால் நான் மிருகமாக இருப்பதில்
பெருமையே எனக்கு.........
=========================================
{குரங்கிலிருந்து வந்தவர்கள் தானே நாம்
பின்பு நம் குணம் மட்டும் எப்படி வேறாகும்}
````மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு````

வலிக்கிறது வாழ்க்கை

அறியாத காயம் அனுபவமில்லாத வலி..

புதியதாய் தோன்றுகிறது வாழ்க்கை..

வாழப்பிறந்தோம் என்பதற்காக வலியோடு வாழ வேண்டாமே..

வலிக்கான மருந்து உன் வாழ்க்கையின் வழியிலே விழித்திருக்கும்..

கண்டுகொள்ளாமல் சென்றால் வலி உன்னோடு பயணித்துக் கொண்டேதான் இருக்கும்..

பிறந்தது வாழத்தான்.. ஆனால் காடு போன போக்கிலே அல்ல..

நீ வகுத்த வழியில் வாழ்க்கையை எடுத்துச்செல் ..

அதன் முடிவு உன் முயற்சிக்குக்கிடைத்த பரிசாய் பிரதிபலிக்கும்..

பிறந்ததின் அர்த்தமும் வாழ்வின் மகத்துவமும் உணர்வாய்..

என் கவிதை

என் வாழ்க்கையை
இரசிக்காதவர்கள் எல்லாம்
என் கவிதையை
இரசிக்கிறார்கள்- ஆனால்
என் வாழ்க்கையைத் தான்
நான் கவிதையாய்
வார்க்கிறேன் என்பதை
வாசிப்பவர்கள்
கண்டு கொள்வது....................

Tuesday, December 20, 2011

இறுதி வரி


இறுதி வரி(வரை) ஏக்கம்...........
மதங்கள் மனிதம் உணரக்கண்டேன்....

சின்னங்கள் ஒன்றாய் இணையக்கண்டேன்....

ஏழைகள் மனதில் சிரிப்பை கண்டேன்...

விழாக்கள் ஒன்றாய் வலம் வரக்கண்டேன்...

மனிதத்தை மனிதன் அடைந்திடக்கண்டேன்...

தீவிரவாதிகள் பொதுச்சேவை புரியக்கண்டேன்...

கண்டங்கள் ஏழும் இணையக்கண்டேன்...

உதவும் கரங்கள் உயர்ந்திடக்கண்டேன்...

இவையணைதையும் ,,,,,,,





பகலில்
கனவில் கண்டேன்...........

கூறுங்கள் பகல் கனவு பலிக்குமா?

கடவுள் எங்கே?

ஆன்மீகவாதியைக் கேள்,
விண்வெளியைச் சுட்டுவார்,
கண்ணுக்குத் கடவுள் தெரிவதுண்டோ!
கோவிலைக் காட்டுவார்,
கோவிலில் சிலைகள் மட்டுமே உண்டு;

பூமியில் மனிதரில்
காணாத கடவுளையா
விண்வெளியில், கோவிலில்
காண்போம்!

அன்பு கொண்டவர் மனத்திலும்
மனிதாபிமானம் உள்ளோரிடமும்
கள்ளமில்லா குழந்தைகளிடமும்
பார் தெரியும்.

பாடம்

என் வாழ்கை ஆசானிடம்
நான் கற்றுக்கொண்ட
" முதல் பாடம்"
எவரையும் உண்மையாக நேசிக்க கூடாது.
என்றும் உனக்கு நீ தான் ☝
இப்படிக்கு
ஜெனந்தன் குமாரசாமி

அன்பை நிரூபி

சயின்ஸ் ஆகட்டும்
சாஸ்திரம் ஆகட்டும்
அன்பை தவிர
அது எதை நிரூபித்தாலும்
அதனால் என்ன பயன் ?🌺

Sunday, December 18, 2011

பொய் என்ன செய்யும் ?

உறவு தீபம் கருக கருக
ஏற்றிய பொய்
தீ நாக்கு..!

மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

குப்பைத் தொட்டிக்குள்
குழந்தையை மனிதன் போடுகிறான்
குரங்கும் கங்காரும்
குட்டியை வயிற்றில் சுமக்கிறது
மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

விடியலைத் தேடி


விடியலைத் தேடி ஒரு கடிதம் எழுதினேன்..

விடிந்த பிறகு தான் தெரிந்தது..

நான் இரு கண்களையும் இழந்த குருடன் என்று..

ஒன்னுமில்லா சந்தோசம்

வெளியே கிடைக்கும் சந்தோசங்கள்
வெள்ளைப் பூண்டுகள்

பிரிவின் எல்லைகள்..!

மதம் காக்க போர்,
மிளகுக்காக போர்,
தங்கத்திற்காக போர்,
எண்ணெய்க்காக போர்,
இப்போது தண்ணீருக்காகவும் போர்.!
இனி காற்றுக்காகவும் நடக்கலாம்.!

ஆரியன்-திராவிடன்
வடஇந்தியன்-தென் இந்தியன்
தமிழன்-கன்னடன்
தமிழகம்-கேரளம்
குறுகிக்கொண்டே போகும்
எல்லைகள்,காட்டுவதென்னவோ
பிரிவின் அகலங்களை..!

மதம்-இனம்,மொழி-நிறம்
நாடு-எல்லை,
அரசியல்-பொருளாதாரம்
எல்லாம் கடந்து
ஒரே வானம்,ஒரே பூமி
அனைவரும் மனிதர்களே..
எப்போது வரும்
அந்தக்காலம்..?

அன்பின் வலி ...........

அன்பாய் வளர்த்த
ஆட்டுக்குட்டி விற்ற காசு

அரைப்பவுன் மோதிரமாய்
விரலில்

மோதிரவிரலைப் பார்க்கும் போதெல்லாம்
ஏனோ வலிக்கிறது மனது ............

Thursday, December 15, 2011

உண்மை எதுவென்று தெரியும்.

கண்ணெதிரே நிற்பவர்
யாரென்று தெரியும்
உண்மையில் அவர்
யாரென்று தெரியாது...

கேள்விகளுக்கு பதில்கள்தான்
சரியென்று தெரியும்
கேள்விகளுக்கு சரியான
பதில்கள் தெரியாது...

தெரிந்தவையெல்லாம் தெரியாமலும்
தெரியாததெல்லாம் தெரிந்தும்
போகலாம்...என்றாவதொருநாள்!
உண்மை எதுவென்று தெரியும்.

உறவுகள்....

உயர்ந்தால் ஓட்டும்....
உதவி என்றால் வெட்டும்.....

தேடி வரும் தென்னை

மாடி வரை வளர்ந்த தென்னை
என்னவோ என்னுடனே எப்போதும்
ஜன்னலுக்கு உள்ளும் தலை நீட்டி...

எப்போது சொன்னாலும்
தலை ஆட்டும் தென்னை என்ன
காற்றுக்கு அடிமையா?

மரத்தின் மேலும் கீழும்
ஓடி விளையாடும் அணில்களுக்கு
தென்னை அதன் சொத்தா?

மண்ணிலே இளநீரை எறிந்து
விளையாடும் தென்னைக்கு
மண்ணின் மௌனம் புரிகிறதோ?

எத்தனை இடறினிலும்
மௌனமாய்த் தாங்கும் மண்ணுக்கு
அஞ்சலி செலுத்துமோ தென்னையும்?

ஒரு பக்கத்துச் சுவரினால்
வளர முடியாமல் போய்
என் பக்கம் வந்தாயோ?

கம்பிச் சூட்டை தாங்குமோ என்னவோ?
இந்த தென்னையின் கைகளை
காப்பாற்றுவது எப்படி?

கம்பியை வளைத்தால் எனக்கு பாதுகாப்பில்லை
தென்னையை ஒடித்தால்
அதற்கு வலியின் தொல்லை...

இருக்கும் வரை சேர்ந்திருப்போம்
ஜன்னல் வழி பார்த்திருப்போம்
தென்னைக்கும் ஒரு தேங்காய் உடைப்போம்...

அச்சம் வேண்டாம் அன்பு கொடு

வாழை கன்று நீ நட்டாய் -
வாழை கன்று பிறந்தது...!
விதை என்ற அன்பை நீ நட்டால்...
விருட்சமாய் அதுவும் வளராதோ..?
யோசித்து முடிவெடு...!
அச்சம் வேண்டாம் அன்பு கொடு !

Wednesday, December 14, 2011

காலம் செய்த மாற்றம்

கோடி உயிர்கள் விதைகளாய் புதைந்து
பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்தில்
வேற்றுமை கலந்துவிட்டது
மேலவர்களுக்கு உள்ள சுதந்திரம்
கீழவர்களுக்கு இல்லை
நாய்களுக்கு இருக்கும் நன்றி
மனிதர்களிடம் இருப்பது குறைவு
யாரை பிழை கூறுவது ?
காலம் மாறிவிட்டது , மனிதரையும்
மாற்றிவிட்டது ...........

கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

காட்டு வழியே செல்கின்ற
குருட்டுப் பிச்சைக் காரன் நான்
இடர்களுக்கு நடுவே செல்கிறேன்
பாதகம் இல்லாமல் நான் கடக்க
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா!

அரசியல் புயல் என்னை தாக்கிடலாம்
அஞ்ஞானம் எனும் வெள்ளம் அடித்திடலாம்
வழிப்பறி காவலரிடம் நான் கொள்ளை போகலாம்
தொழில்றீதிக் கள்வர்கள் எனைக் கவவர்ந்திடலாம்
இந்த கோர விபத்திலிருந்து காப்பாற்ற
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

லஞ்ச ரத்தக் காட்டேரிகள்
கறுப்புப் பண இடுகாட்டுப் பேய்கள்
பதவி வெறி பிடித்த ஓநாய்கள்
ஊரை ஏய்க்கும் குள்ளநரிகள்
வந்து என்னைத் தீண்டிடாமல்
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

மறைந்திருப்பதை பார்க்கலாம்

வண்டு மூடிய மாம்பழம்
கல்லுக்குள் தேரை
மனசுக்குள் மனிதம்
ஒளிந்து கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்

Tuesday, December 13, 2011

வெளிச்சம் வேண்டும்

விளக்கும் அற்ற-ஒரு
வீட்டுக்குள்
விழுந்து கிடக்கிறேன்
விதியோ இல்லை
நான் கொண்ட
மதியோ
அதனை மதிப்பிடக்கூட
எனக்கு மதி
போதவில்லை
விதி தான் என்னை
விழ
வைத்தது
விளையாட்டாம் அதற்கு
என்னுடன் எதற்கு
வீண் வம்பு
விளகிச்செல்லாமல்
வீராப்பாய்
விலை பேசுகிறது
என் என்னை
எதற்கு
என்று நான் அறியேன்............

இருட்டறையில்
ஈ கூட
இல்லை
இந்த ஏழை
இருதயம் மட்டும்
இளக்காரம் போலும்
இம்சைப் படுகிறேன்
அஹிம்சை அற்ற
இருளே
அகன்று விடு
முதலில் என்னைக்கட்டி
அடுத்ததாய் என் கண்ணைக் கட்டி
இன்னும் என் உயிரைக்கட்டப்போலும்
உன் உத்தேசம்,
உயிர்தேளும்வரை நான்
ஒரு
உருவற்ற
உடல் தான்- நான்
உயிர் பெற்றுவருவேன்
ஒரு நாள்
என் யாகம்
பலித்து விட்டால்.........

வெறுமை...!!!

பாசமும் நேசமும் படை சுடி நான் நிற்கையில்.
வேஷம் என்று நீ உன் வழி நடக்கையில்.
வாசலே இன்றி நான் வாழ்கிறேன்...!!!

ஆங்கிலம்

If someone feels
that they had never made
a mistake in their life...
It means they had never tried
a new thing in their
life..........

எங்கே மனிதாபிமானம் ?

இமய மலையில் ஒரு ஈ
மனித மலையில் மனிதாபிமானம்
உறைந்து விட்டதா ?
உயிர் வாழ்கிறதா..?

ஏழாம் அறிவு .

ஓரறிவு உயிரினம் மரம், செடி, கொடி,
இரண்டறிவு உயிரினம் நத்தை, சங்கு, ஆமை
மூன்றறிவு உயிரினம் எறும்பு, கரையான்
நான்கறிவு உயிரினம் நண்டு, வண்டு, பறவை
ஐந்தறிவு உயிரினம் ஆடு, மாடு, சிங்கம், புலி
ஒரு சில மனிதர்கள்
ஆறறிவு உயிரினம் மனித பிறவி
(சிரிக்க சிந்திக்க தெரிந்தவர்கள்)
7வது அறிவு மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

சில உறவுகள்...

புதிதாய் காலையில் வரும் தினசரிகளுக்கு
என்றும் அதிரடி வரவேற்பு
இன்று கூட...

ஓரமாய் பெட்டியில்
சேர்ந்திருக்கும் பழைய தினசரிகள்
யாரும் தேடப்படாமல் அடுக்கடுக்காய்...

ஒவ்வொரு தாளும் ஆசையாய்
ஒரு நாளில் படிக்கப் பட்டது
இன்று இப்படி சீண்டுவார் இல்லாமல்...

முதலில் இருக்கும் சுவாரஸ்யம்
பின்னாளில் இருப்பதில்லை
வெறும் குப்பைகளாய்ச் சேரும் உறவுகள்...

Tuesday, December 6, 2011

வரணி ஊடாக பருத்துறை

கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்.

புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் (டீ68) வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.

விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ் ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.

இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி அதனுடைய தனித்துவமான 'பாம் பாம்' ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.

சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான பல காலங்களிலும் இயங்காத அரசுப் பேருந்து சேவையைத் தவிர பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை,துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். 'இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ'ம்'சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ 'ம்' அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்' என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் 'அண்ணை றைற்' சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள்.

இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. 'டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?' என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் 'போயிட்டு வாறன்' சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.
கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் 'அண்ணை றைற்' சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.

எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

Saturday, December 3, 2011

வார்த்தைகள்


தனித்திருத்தலின்

வலி அறியா

தவிப்பின் தனல் புரியா

காற்றைப் பிளந்து

எனைக் கிழிக்க வரும்

உன் சொற்களுக்கு….

Tuesday, November 29, 2011

கொடியது

உண்மையான வெறுப்பை விட கொடியது பொய்யான நட்பு

Monday, November 28, 2011

க‌வ‌லைக‌ள்


நீ உன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
என்னை மறந்து விடுகிறாய்…
இப்படிக்கு கவலைகள்

Sunday, November 27, 2011

இயற்கை பேசினால்


மெளனமாக இருப்பதே
இயற்கைக்கு அழகு – அது
மெளனத்தை கலைத்தால்
அது செயற்கை…
ஓவியம் பேசியதில்லை
மற்றவர்களை பேச வைத்ததுண்டு
இயற்கை மெளனமாக இருக்கும்
ஆனால் மற்றவர்களை பேசவைக்கும்

என்னை முன்வைத்து


சமீபமாக காணமல்
போய்விட்டான் .


மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.


தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது

தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .

Saturday, November 26, 2011

நான் - எனது நீட்சி


முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது- சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
கூசாமல்
கொடியவனின் அடுத்த பிறந்தநாள் காண துடிக்கிறது சுரணையற்ற எம்மினம் - இன்று

பயணங்கள்


வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Friday, November 25, 2011

நீ

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைகள்
மீண்டும் கிளறிவிடுகின்றன
மறந்துபோன
உன் நினைவுகளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

பயணம்


தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்!

வார்த்தைகள்


கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

நண்பர்கள்

நண்பர்கள்
பிரிவதில்லை காரணம்
பிரிவதற்கு அவர்கள்
உறவுகள் அல்ல
உணர்வுகள்.
இருந்தும், சில வெட்டுக்கிளிகள்
இருக்கத்தான் செய்வார்கள்.

Thursday, November 24, 2011

தன்னியக்க வங்கி இயந்திரத்தில் எவ்வாறு நான்கு இலக்க இரகசிக குறியீடு வந்தது தெரியுமா

தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இயந்திரமாக்கி, தன்னியக்கமாக்கியது. பொதுவாக இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விடுவர். இந்த இயந்திரம் 1967 ம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன். தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.

Tuesday, November 22, 2011

உலகளாவிய வலை - World Wide Web

உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சேர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில் "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, அந்த வலையை டிசம்பரில் வெளியிட்டனர். முன்பே உள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டு, களப் பெயர்கள் மற்றும் எச்.டி.எம்.எல் (HTML) மொழிக்கான சர்வதேசத் தரநிலைகள் சேர்க்கப்பட்டு உலகளவில் பிற வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி, பெர்னெர்ஸ்-லீ (வலைப் பக்கங்களைத் தொகுக்கப் பயன்படும் மார்க்-அப் மொழிகள் போன்ற) வலைத் தரநிலைகளின் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதிலும் வழிநடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தார், சமீபத்திய ஆண்டுகளில் தனது கவனத்தை பொருள் வலையில் செலுத்தி வருகிறார்.

உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்.

Monday, November 21, 2011

நகம் கடித்தல்

நகம் கடித்தல் (Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.


ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள்.

குழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
வயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
நகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.
குழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நம்பப்படும் காரணிகள்.
தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

Sunday, November 20, 2011

சிந்தனை

நல்ல நண்பனை விரும்பினால் நல்லவனாய் இரு- மகாத்மா காந்தி

சண்டை செய்யும் வழிமுறை;

சண்டை செய்யும் வழிமுறை;
தேவையான பொருட்கள்:
காதல் 2kg
நட்பு 200g இது காரம் அதிகம் எனவே அதிகம் போடக்கூடாது.
பெற்றோர் 100g
அரட்டை தேவையான அளவு.
செய்முறை:
முதலில் காதலை வாயில் போட்டு நன்றாக வறுக்கவும். இடையிடையே அரட்டையை போட்டு நன்கு வறுக்கவும். நன்கு சூடேறியதும் பெற்றோரை போட்டு கிண்டுங்கள். அப்போது பொங்கியெழும் நேரம் நட்பை தூவி இறக்குங்கள்.
சூடான சண்டை ரெடி

Friday, November 18, 2011

இந்து சாதனம் (Hindu Organ) என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ்.

இந்து சாதனம்

இந்து சாதனம் (Hindu Organ) என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ் ஆகும். இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்றும் சைவபரிபாலன சபையினரால் மாதமொரு முறை வெளியிடப்பட்டு வருகின்றது.

வரலாறு

இந்து சாதனம் பத்திரிகை செப்டம்பர் 11, 1889ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையினரால் அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் (Hindu Organ) கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது.

இந்த இரு மொழிப் பத்திரிகை ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.
ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கியவரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமாகிய தா. செல்லப்பாபிள்ளை அவர்கள். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங்கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர்.

தமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை. அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர்.

அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.

உசாத்துணை

மார்ட்டின், ஜோன் எச்., Notes on Jaffna, American Ceylon Mission, தெல்லிப்பழை, 1923 (இரண்டாம் பதிப்பு: 2003)
பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி), கொழும்பு, 1990

Thursday, November 17, 2011

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் கொண்டுள்ளது.

சம்மு காசுமீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருமான்மையினராக உள்ளனர்; லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காசுமீர் மாநிலம், காசுமீர் பிரச்சனையால் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ”இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.

சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.


சம்மு காசுமீர் மாநில கொடி
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல்.

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு ஜூன் 13 முதல் ஜூன் 20 வரை இடம்பெற்றது. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.

1931 இல் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு முன்னர் இருந்து வந்த இலங்கை சட்டசபைக்குப் பதிலாக இலங்கை அரச சபை உருவாக்கப்பட்டது. 58 உறுப்பினர்களில் 50 பேர் பொதுமக்களாலும், 8 பேர் பிரித்தானிய ஆளுநரினாலும் நியமிக்கப்பட்டனர்.

பழைய சட்டசபை 1931 ஏப்ரல் 17இல் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்க சபைக்கான மனுக்கள் 1931 மே 4 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது. இதனையடுத்து இலங்கையின் வட மாகாணத்தில் நான்கு தொகுதிகளில் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன், ஒன்பது தொகுதிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.ஏனைய 37 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் 1931 ஜூன் 13 முதல் 20 வரை இடம்பெற்றன.

இடைத்தேர்தல்கள்

வட மாகாணத்தின் 4 தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன. பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

யாழ்ப்பாணம் - அருணாசலம் மகாதேவா
காங்கேசன்துறை - சுப்பையா நடேசன்
ஊர்காவற்துறை - நெவின்ஸ் செல்வதுரை
பருத்தித்துறை - ஜி. ஜி. பொன்னம்பலம்

மங்காத்தா (விளையாட்டு)


மங்காத்தா ஒரு சீட்டாட்டம். சூதாடப் பயன்படுகிறது. இதனை ஆட இரு ஆட்டக்காரர்களும் ஒரு சீட்டுக்கட்டும் தேவை. ஆட்டக்காரர்கள் சீட்டைப் போடுபவர் சீட்டுத் தெரிவு செய்பவர் என இரு வகைப்படுவர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு ஆட்டக்காரர்களும் சமமான அளவு பந்தயம் கட்டுவர். பின் சீட்டைப் போடுபவர் எதிராளியிடம் ஒரு சீட்டைத் தெரிவு செய்யச் சொல்லுவார். சீட்டு தெரிவான பின்னால், தன் கையிலிருந்த கட்டிலிருந்து சீட்டுகளை ஒவ்வொன்றாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் போடுவார். ஒன்று “உள்ளே” இன்னொன்று “வெளியே”. ஒவ்வொரு சீட்டு விழும் போது “உள்ளே” அல்லது “வெளியே” என்று உரக்க சொல்லுவார். எதிராளி தேர்வு செய்த சீட்டு வரும் வரை சீட்டுகளை போட்டுக் கொண்டே இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சீட்டு “உள்ளே” பிரிவில் விழுந்தால் சீட்டைப் போடுபவர் வென்றவராவர்; “வெளியே” பிரிவில் விழுந்தால் சீட்டைத் தெரிவர் வென்றவராவார். பந்தையப் பணம் முழுவதும் வெற்றி பெற்றவருக்கு.

Sunday, November 13, 2011

சாக்கிரட்டீசு - Socrates

சாக்கிரட்டீசு (கிமு 470 - கிமு 399) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.
சாக்கிரட்டீசின் முறை

சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.

வெளி இணைப்புகள்

சாக்ரடீஸ் பற்றி
நகரத்தின் சிந்தனாவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருண்த்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாககாமல்,தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது ‘Great Dialogues’ புத்தகத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
விஷம் அருந்தும் சற்று நேரத்துககு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்ககப்பட்டதால், தன் கால்களை தேய்த்துவிட்டுக கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ‘ஆன்மாவுககு மரணமுண்டா, மறு பிறவு என்பது இருககிறதா?’ என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம். இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுககமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.
சாகும் தருவாயில்கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்கக முடிகிறது. அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, ‘என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைககுள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுககு கோபம் ஏதும் இல்லையே?’ என்று குரல் உடைந்து அழ,
எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.
“எனககு விஷம் தயாராக இருககிறதா?”
அவருடைய முதன்மை சீடர் கரீட்டோ கண்ணில் நீர்வழிய,’அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக கொள்ளலாம்’ என்றார் பதற்றமாக.
‘நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா கரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிககாதா?’ என்றுவிட்டு உடனே விஷக கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் சாவு பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருககு இருந்திருந்தால் சாவு எனும் ‘வாழ்வின் ஒருமுறை’ நிகழ்வுககு அவ்வள்வு தயாராய் இருந்திருப்பார்?.
தன் சாவு- நிச்சயமான ஒன்று என்கிற அறிவு,அதிகார வர்ககம் அவருககு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்ககிற அறிவு, அவருககு இருந்ததால்தான் அவரால் சாவு என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காகக முடிந்திருககிறது.
அது மட்டுமல்ல!
விஷத்தை அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார். பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்த அதுவரை சோகத்தை அடககி வைத்துக கொண்டிருந்த சீடர்கள் ஒவ்வொருவரும் கதற,’ என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக இருககுமே!’ என்றாராம்.
‘என்ன ஒரு மனிதர்?’ என்று பிரமிககத் தோன்றுகிறதல்லவா?.
அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்’ என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்’ என்றோ, இறைவனடி சேர்ந்தார்’ என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை ‘சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.
ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருககிறது!.
Jana1163

Thursday, November 10, 2011

ந‌வோத‌யா ப‌ள்ளியும் தமிழ்ப்பற்றும்

நவோதயா பள்ளி
நவோதயா பள்ளி இந்தியாவில் எல்லா மாநிலத்துலயும் இருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் இல்ல. இது வந்தால் ஏகப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பலன் பெற முடியும்...

பாண்டிசேரியில் மிக சிறப்பாக நடக்குது இந்த இலவசபள்ளி. இந்த வருடம் 100% தேர்ச்சி.

சிலர்

சிலர் நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்துடக்கூடாது தமிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க...

இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் டிவி நிகழ்ச்சியில பிற மொழி இருந்தால் அதை பார்க்கவே மாட்டேன்னு சொல்றாங்க...

தமிழ் படங்களில் தமிழ் வார்த்தையை தவிர வேற எதாவது ஒரு வார்த்தை இருந்தா கூட அந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன்னு சொல்லுறாங்க.

தமிழ் பாட்டுல தமிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்கவே மாட்டோம்..ரேடியோவ ஆஃப் பண்ணிடுவோம்னு சொல்லுறாங்க.

ம்ஹீம் இதுவரை சொன்னது இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க, கேட்க நமக்கு பிடிக்கும். இதுல எல்லாம் நம் தமிழ் பற்றை காட்டவே மாட்டோம்.

ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இதுவே தான் இலங்கையில் நடப்பதுவும்.

நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
தமிழ் தமிழ் என்று புலம்பெயர் நாட்டில் இருந்து சிலர் தமிழ் பற்றில் உள்ளது போல் ஈழ போரின் இறுதியில் ஏன் இன்று கூட கத்துகிறார்கள். புலம்பெயர் தமிழர் ஒருவரை சந்தித்த போது அவர் ஒரு தகவலை சொன்னார் வேடிக்கையாகவும் பிறரை உலகநியதி தெரியாதவர்களாகவும் தாம் தமிழ் பற்றாளர் போலவும் சித்தரித்தார், அவர் கூறியது " நான் ஈழபோரின் இறுதிகாலத்தில் தமிழ் உறவுகளுக்காக இரண்டு நாட்கள் வீதியில் படுத்து உண்ணாவிரதம் இருந்ததாக" கூறினார். நான் அவரிடம் கேட்டேன், உங்கள போல எத்தனைபேர் எத்தன ஆண்டுகளா உண்ணாவிரதம் இருக்கிறியள்? உங்களால என்ன சாதிக்க முடிந்ததது. உங்கிருந்து உதய் செய்வத விட இலங்கைபோய் இருதிபோரில் நின்றிந்தால் பலன் ஏதும் கிடைத்திருக்கும் அல்லவா? என்றேன், அவர் கூறினார் வேடிக்கையாகவும் சற்று வருத்தமாகவும்,அவரின் மனதில் உள்ளவை வெளிவந்தது."நான் போயிருப்பன் குடும்பத்தை யார் பார்க்கிறது என்றார். பதிலுக்கு கேட்டேன் இலங்கையில் உள்ளவர்கள் எவருக்கும் குடும்பமே இல்லையா? உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு எவ்வளவு வசுலாகியது? என்று கேட்க, எப்படி தெரிந்தது என்ற குற்ற உன்னர்வுடன் பார்த்தார். தயவு செய்து நீங்கள் ஈழத்தில் உள்ள தமிழருக்கு ஏதும் செய்ய விரும்பினால் இலங்கைக்கு போய் செய்யுங்கள். அங்கேயிருப்பவர்கள் அனாதாராவாக இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் நினைத்த பாட்டிற்கு எதையும் இனியாவது செய்யாதீர்கள் என்று சொன்னேன்.

விடயத்துக்கு வருவோம்

நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...

நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.

==========================


அது பற்றிய சில கட்டுரைகள்


சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி

புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.


============================================

இதுவும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுபள்ளி தான்....அவங்களால முடியுது.... நம்ப மாநில அரசினால் முடிவதில்லை...ஏன்?

=============================================

2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009

எழுத்தின் அளவு :


நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.

அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும். ஆனால் எத்தனை கல்லூரிகள் சமூகச்சீர்கேடாகவும் கல்லூரி பேருந்துகளிலும்,கல்லூரி வளாகத்திலும் அரங்கேறும் காட்சிகள். அரசியல் இலாபத்துக்காகவும், கைநாட்டு கொடுத்து பட்டபடிப்பு முடிப்பதும் சாதாரண விடயமாகிவிட்டது. தமிழ்நாட்டு படிப்பிற்கு வேலையே இல்லை என்றநிலை.

Tuesday, November 8, 2011

தூரங்கள்

தூரங்கள்

காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
நிணல்....

தவிப்பு...

தவிப்பு
திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்.....

Sunday, November 6, 2011

உண்மை உணர

உண்மை உணர

ஒவ்வொரு நிகழ்விற்கும்
மூன்று பக்கம் உண்டு !
ஆம்
ஒன்று
உனது பக்கம் !
இரண்டு
அவர்கள் பக்கம் !
மூன்று
உண்மையின் பக்கம் !

Saturday, November 5, 2011

பக்கத்தில் நடந்துவா ...!

பக்கத்தில் நடந்துவா ...!

என்பின்னால் நீ
நடந்து வராதே !
உன்னை
வழிநடத்திச் செல்ல
என்னால்
முடியாமல் போகலாம் !

என் முன்னாள் நீ
நடந்து செல்லாதே!
உன்னைப்
பின்பற்றித் தொடர்ந்துவர
என்னால்
முடியாமல் போகலாம் !

என்பக்கத்தில் நீ
என்னோடு சேர்ந்து நடந்துவா !
நல்ல நண்பனாய்
உன்னோடு சேர்ந்து
நடப்பேன் நான் !

முதுமை


முதுமை


மனிதன்
புறப்பட்ட இடம் நோக்கி
புறப்படும் பயணம் !

மனிதனுக்கு
மீண்டும் ஒரு
குழந்தைப் பருவம் !

மனித
எந்திரத்தின்
தேய்மான வெளிப்பாடு !

மனிதன்
வாழ்க்கைப் பாடத்தை
புரிந்து வாழத் தொடங்கும் காலம் !

மனிதன்
வீடு முடிந்து
காடு செல்ல எண்ணப்படும்
"கவுண்டவுன்" நாட்களின்
ஆரம்பம் !

பிள்ளைகளுக்குப்
பெற்றோர்
பிள்ளையாகும் படலம் !

முதுமை..
முன்னால் நிற்கும்
இறப்பை எண்ணி கலங்கும் !
முடிந்துபோன
இளமைக்காக ஏங்கும்!!

முதுமையில் ...
அழகு அழிவாகும்
அறிவு அழகாகும்
உடல் மெலிதாகும்
உள்ளம் தெளிவாகும் !!

மனிதனின்
மனம் முதுமையானால்
இளமையிலும்
முதுமை ஏற்ப்படுவது உண்மை !

Friday, November 4, 2011

இரவும் பகலும்

இரவும்
பகலும்


இரவு

உழைத்து களைத்த உலகம்
உறங்கிக் களைப்பு நீங்க
எவனோ ஒருவன் போர்த்திவிட்ட
"கருப்புக் கம்பளம் !"

கயவர்களும் கள்வர்களும்
கடமையாற்றக்
காத்திருக்கும் காலம் !

சூரியனைத் தொடர்ந்து
விடியும்வரை நகரும்
"கருநிழல்!"

பகல்

உறங்கும் உயிரினங்களை
ஒட்டுமொத்தமாக எழுப்பிவிட
உதயசூரியன் நீட்டும்
"ஒளிக்கரம் !"

இரவோடு உறவாடி
ஓய்வு கண்ட உலகம்
வயிற்றுக்காகவும்
வசதிக்காகவும்
பாடுபட
எவனோ ஒருவன் அளிக்கும்
"அவகாசக் காலம் !"

சூரியக் கண்ணாடியில்
பூமியின் தோற்றம் !

Thursday, November 3, 2011

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைச் சூறாவளி

கடந்த சில மாதங்களாக தமிழ் விக்கிப்பீடியா இதுவரை சந்தித்திராத ஓர் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பலகாலமாக 68ஆம் இடத்திலே இருந்த தமிழ் விக்கிப்பீடியா 64 வரை முன்னேறக்கூடிய நிலையை அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான உந்துசக்தியாகவும் தொடர் உழைப்பாளராகவும் இருப்பவர் தன்னந்தனியே 3000 கட்டுரைகளை மூன்றே மாதங்களில் ஆக்கிய இலங்கைச் சூறாவளி விக்கிப்பீடியர் புன்னியாமீன் ஆவார்.

பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். கல்வித்துறையில் பல பொறுப்புகளுக்குப் பிறகு, தற்போது வெளியீட்டு நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இதழியலில் ஆர்வம் மிக்க இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கிய பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 200 கட்டுரைகள் எழுதும் சாதனை நிகழ்த்த திட்டமிட்டார். தனது அலுவலக உதவியாளர்கள், மனைவி மற்றும் மக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் எண்ணியதற்கு மேலாக ஒரே நாளில் 300 கட்டுரைகள் இட்டு சாதனை படைத்தார். சமூகமாக இயங்கும் விக்கிப்பீடியாவின் நெறிகளுக்குட்பட்டு இவர் நிகழ்த்தியுள்ள இந்த வேள்வி மற்ற தமிழர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருந்து தமிழ் விக்கிப்பீடியா விரைவில் 50000 கட்டுரைகளை எட்ட வழிசெய்யும்.

அறியவேண்டியது....!

அறியவேண்டியது....!


தோல்வியைத் தொடர்ந்து
சுமந்தவருக்கு மட்டுமே
வெற்றிவாகனத்தில்
பயணிப்பதன் சுகம் தெரியும் !

துன்பப் பாதையில்
தொடர்ந்து பயணிப்பவருக்கு மட்டுமே
இன்பச் சிம்மாசனத்தில் அமர்ந்ததன்
இதம் தெரியும் !

நிஜம் தெரியாமல்
நிழலில் வாழ்பவருக்கு மட்டுமே
நிஜத்தின் நிழலோடு
வெயிலில் உழைப்பவனின்
உண்மை தெரியும் !

போதும் என்பதற்குமேல் என்பதன்
பொருள் அறிந்தவருக்கு மட்டுமே
"போதும்"என்பதன்
பொருள் தெரியும் !

உனக்கு நீயே போதிமரம் ! (சிந்தனை வரிகள்


உனக்கு நீயே போதிமரம் !
(சிந்தனை வரிகள் )


கருவறை தொடங்கி கல்லறையில் முடியும்
மனிதனின் வாழ்க்கைப் பயணம்
உண்பதிலும் உறங்குவதிலும் உரையாடுவதிலும்
முடிந்துவிடுவதில்லை !
முழுமை அடைவதுமில்லை !

தன்னை அறிந்தவனே
தரணியில் முழுமையான மனிதன் ஆவான் !

குழந்தையாகத் தொடங்கும் மனிதப் பரிணாமம்
முழுமைமனிதனாக
முற்றுப் பெறவேண்டும்
உருவில் அல்ல !
அறிவில் !!"

நண்பனே ! நீ
எதைக் கேட்டாலும்
எதைச் சொன்னாலும்
எதைச் செய்தாலும்
ஏன்? எதற்கு ? எப்படி ?
என்ற வினாக்களை உனக்குள்
எழுப்பு ! அப்பொழுது
உன்னையே நீ அறிவாய் !
உலகையும் நீ அறிவாய் !"
என்று அன்றே எடுத்துரைத்தார்

"உனக்கு நீயே போதிமரம்!"
என்பதன் வழித்தடம்தான்
சாக்ரட்டீசின் அந்த
தத்துவக் குரல் !


மனமே உனக்கு ஆசான் !
மனச்சாட்சியே உனது நீதிபதி!
உனது தவறுகளை முதலில் சுட்டிக்காட்டிக்
கண்டனம் தெரிவிப்பதும்
உனது சாதனைகளை கைதட்டி முதலில்
பாராட்டுவதும் உனது மனசாட்சிதான் !

நீ செய்யும் தவறுகளும்
உனக்கு ஏற்படும் தோல்விகளும்
உன்னை ஞானம் பெறுவதற்கான பாதையில்
உனது மனத்திருத்தம் மற்றும் விடா முயற்சியின் மூலம்
அழைத்துச் செல்லும்

தவறுதல் மனித இயல்பு !
திருந்திக் கொள்வது மனித மரபு !
திருந்தியவன் உயர்ந்தவனாகிறான்
திருந்தாதவன்வருந்தியே மாய்கின்றான் !

நீ
செய்யும் பாவங்கள் புண்ணியங்கள் தர்மங்கள் அதர்மங்கள்
அத்தனையும் உனது" மனம் "
அன்றாடம் பட்டியலிடுகின்றது
அப்பொழுது உனது"மனசாட்சி "
நல்லவைகளுக்கு "மகிழ்ச்சி" "திருப்தி '
என்ற பரிசுகளை வழங்குகிறது
தீயவைகளுக்கு ":குற்றஉணர்வு"மனஉளைச்சல் "
என்ற தண்டனைகளை வழங்குகின்றது !

உனக்கு நீயே போதிமரம் இதை உணர்ந்தால்
உனக்கு ஞானம் வரும் !

ஞானம் தேடி நீ புத்தரைப்போல்
வனத்திற்குள் செல்லாதே
உன் மனதிற்குள் செல் ! அங்கே
உனது தேடலின்மூலம்
ஞானப் புதையல்களைப் பெறலாம்!

உனது செயலுக்கு வழி வகுப்பது அறிவு !
உனது செயலுக்கு வழி கட்டுவது மனசு !
வழி வகுப்பவன் உயர்ந்தவனா ?
வழி காட்டுபவன் உயர்ந்தவனா ?
முடிவு உன்கையில் !
முடிவை அறிந்துகொண்டால் நீ
ஞானம் பெற்ற்வனாகின்றாய் !

இறுதியாக இந்த
வினாவை எழுப்பி
விடைபெறுகின்றேன் !

"விண்ணைத் தோண்டி விந்தைகள் காணும் மனிதா !
மண்ணைத் தோண்டி பொன்னைக் காணும் மனிதா !
உன்னைத் தோண்டி உன்னைக் காண்பது எப்போது ?"

பி .கு :இந்த வினாவிற்குரிய விடையை நீ
அறிந்துவிட்ட்டால் உண்மையில் நீயே ஞானி !










காந்தத்தினால் மனிதர்களிடம் உண்மையை பெறலாம் : ஆய்வில் தகவல்!


காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் வாங்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள். நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள `டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார்டெக்ஸ்’ என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள்.

இப்பகுதியின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள் .

நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

Thursday, October 13, 2011

நகைச்சுவை; இரசித்தவை

நகைச்சுவை; இரசித்தவை

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: "
பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
=================================================

"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"

"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
=================================================
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
================================================

"யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?"

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு"
================================================

"அந்த பெயிண்டர் ரொம்ப தொழில் பக்தி கொண்டவர்!"

"எப்படி?"

"அவர் பிள்ளைகளுக்கு வெள்ளையப்பன், கருப்புசாமி,
நீலவேணி, பச்சையம்மாள்னு பேர் வச்சிருக்காரு"
================================================

"அவர் 'நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்'னு சொல்றாரே?"

"அவர் மனைவி பெயர் சத்தியம்"
================================================

"போன தீபாவளிக்கு வாங்கின ஸ்வீட் நல்லா இருந்தது அதே
மாதிரியே கொடுங்க"

"அதே ஸ்வீட்டே இருக்கு, இந்தாங்க"
==================================================

"ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகனும்கறையே , ஏன்டா?"

"டாக்டர்தான் ஆவி பிடிக்க சொன்னார்"
==================================================

"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு
வில்லி"

"எப்படி?"

"பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை
சமயத்தில வில்லி"
===================================================

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்ச பிறகு, தொண்டர்கள்
ஏன் சந்திக்க பயப்படுறாங்க?"

"தலைவர் கன்சல்டிங் ஃபீஸ் கேட்குறாராம்"
===================================================
.

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

தமிழ் கலை இலக்கியப் பரப்பில் 'பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன.

ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு 'பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது.

இந்நிலையில் திரு லெனின் மதிவானம்  எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது.



'பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு  மாலை நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகியது.



கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் திரு சிவா சுப்பிரமணியம் அவர்களாகும்.

" சமூகவியல் நோக்கிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வழிகாட்டியவர் அவராகும். இலக்கியப் படைப்பானது மனிதநல மேம்பாட்டிற்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அவர்.


பத்திரிகைத்துறை, பல்கலைக்கழம், விமர்சனம் என பல்துறைகளில் தனது ஆளுமையை அவர் பதித்தார். இதனால்தான் 50 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து ஆற்றிய பணி சந்ததி சந்ததியாக பயன்படுத்தப்பட்டும் முன்னெடக்கப்ட்டும் வருகிறது.

மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு அவர்ஆளானார். காய்த்த மரம் கல்லெறிபடுவது போல அவர் கல்லெறிபட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி மறைந்து பல காம் ஆன பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் கோட்பாட்டு ரீதியாகவே எழுப்பப்பட்டது. தனிப்பட்ட விமர்சனங்கள் குறைவு எனலாம்" என திரு சிவா சுப்பிரமணியம் தனது ஊரையில் குறிபிட்டார்.


ஆய்வுரையை திரு ந.இரவீந்திரன்  ஆற்றினார்.


"வாழ்க்கைப் பின்னணி, எழுத்துக்கள், பத்திரிகைத்துறை, பல்கலைக்கழகம், அரசியல், இலக்கிய அடைப்புகள், விமர்சனங்கள், நிறைவுரை ஆகிய தலைப்புகளில் நூல் பிரித்து எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக
  • கைலாசபதி பற்றிய முக்கிய தகவல்கள்
  • கைலாசபதியின் எழுத்துக்கள் வெளிவந்த பிரசுரங்கள்
  • உலகத் தமிழாராச்சி மாநாடு: பின்னணியும் பின்நோக்கும் - க.கைலாசபதி
  • ஈழத்துத் தமிழ் இலக்கியம் - க.கைலாசபதி
  • சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி
ஆகிய முக்கிய கட்டுரைகள் அடங்குகின்றன.சுமார் 103 பக்கங்களிலுள்ள நூலில் இப் பின்னிணைப்புகள் 40 பக்கங்களை அடக்குகின்றன.


50களில் முற்போக்கு எழுச்சி எற்பட்டது. பின்னர் ரஷ்ய, சீனா எனப் பிரிந்தது. இவர் உறுதியாக சீன தளத்தை எடுத்துக் கொண்டார் இருந்தபோதும் மாற்றக் கருத்தினர் மீது பகைமை பாராட்வில்லை. இதனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உடையாமல் இயங்க முடிந்தது. சீனா சார்பாக மாற்றுக் கருத்துக்களை எதிர்த்து கடுமையாக கட்டுரைகளை எழுதியுள்ளார். சோஷலிச சமூதாயம் நோக்கியதாகவே அவரது பார்வை இருந்தது.

1974ல் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆரம்பித்தது. தாயகம் சஞ்சிகையை முதன் முதலாக நெல்லியடியிலிருந்து வெளியிட்டு வைத்தது அவர்தான்.
விமர்சனங்களைவிட ஆய்வக்கட்டுரைகளிலேயே அதிக நேரம் செலவழித்தார். அவர் தன் அணிசார்ந்தவர்களைத் தூக்கிப்பிடித்து முற்றவர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் சார்ந்தவற்றை, அவர்களை வழிப்படுத்தும் பார்வைகளை ஆதரித்தார் என்பதே உண்மை.

மஹாகவியை இருட்டித்தார் என்று சொல்வது தவறு. அவர் பற்றி அவர் சில இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் மக்கள் இலக்கியம் எனப் பார்க்கும்போது மஹாகவியிடம் முற்போக்கான சில கருத்துகள் இருந்தபோதும் முற்போக்கு இயக்கத்தோடு சேர்ந்து இயங்கியவர் அல்ல. கைலாசபதி தான் சார்ந்த கருத்துள்ள படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தாரே ஒழிய ஏனையவற்றை ஒதுக்கவில்லை.

மக்கள் சாதீயத்திற்கு எதிராக உக்ரமாகப் போரடிக் கொண்டிருந்தபோது தேரும் திங்களும் என்ற கவிதையில் மஹாகவி தேர்வடம் பிடிக்க கெஞ்சி மன்றாடும் புலம்பலை வெளிப்படுத்தினார்.ஆனால் சுபத்திரன் நெருப்பாக வீராப்போடு எழுதினார். அதை இவர் பாராட்டினார்.

உள்நாட்டு நிலவரங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றையும் நூலாக வெளிக்கொணர வேண்டும்." என்றார் ந.இரவீந்திரன் தனது உரையில்.

மற்றொரு ஆய்வுரையைத் தர இருந்த பேரசிரியர் சபா ஜெயராசா சமூகம் அளிக்கவில்லை. தான் அவசர வேலையாக வவுனியா சென்றிருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை எனச் செய்தி அனுப்பியிருந்தார்.

வாசகர் கருத்தரங்கில்  கே.விஜயன் மற்றும் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோர் கருத்துரைத்னர்.

லெனின் மதிவானம் தனது ஏற்புரையை காலம் கடப்பதை அடுத்து சுருக்கமாகச் செய்தார்.


கைலாசபதி தனது காலத்திற்கு முந்தியவர். அவரை நேரச் சந்தித்ததோ பழகியதோ இல்லை. தனது தந்தையும் அவரது நண்பரான திருகணேசலிங்கனுாடகவுமே அவரது பெயர் முதல் அறிமுகமானது. அவரை பற்றிய நூலைத் தந்து படிக்கவைத்தவரும் அவர்தான். ஹைலண்ட்ல் கற்பித்த ஆசிரியர் ஒருவர் கைலாஸ்சின் பார்வை பற்றி எப்பொழுதும் சொல்லுவார். இவை அவர் பற்யி ஆரிவத்தை எழுப்பின.

90களில் தேசியகலை இலக்கியப் பேரவை ஊடாக பார்வை விரிந்தது. இந்த நூலை எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இந் நூலை எழுதுவதற்கான பல தகவல்களை ரவீந்திரன், நீர்வை பொன்னையன், நந்தினி சேவியர், இருதயராஜா ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு நன்றி என்றார்.

கைலாசபதி பற்றியும் அவரது ஆக்கங்கள் பிரசுரங்கள் பற்றிய பட்டியல் பூரணமானது அல்ல. இன்னமும் பலவற்றைச் சேகரிக்க வேண்டும். அவற்றை பின்னர் இணைப்பேன் என்றார்.

கூட்டம் 7மணியளவில் நிறைவு பெற்றது.

Thursday, September 8, 2011

சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை தீர்வு

 சுப்ரமணியன் சுவாமியின்  படிப்பு பொருளாதாரத்தில் டாக்டரேட்,சைமன் குஸ்நெட்ஸ்,பால் சாமுவேல்சன் என்ற இரு நோபல் பரிசுக்காரர்களுடன் இணைந்து பணியாற்றியது ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டியின் பேராசிரியர்,ஜனதா கட்சி அரசின் போது  சட்டம்,நீதி மற்றும் வர்த்தக அமைச்சர் என்ற அவரது புரபைல் இன்னும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விசயம.

 படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் என்ற கேள்விகள் கூட இவர் மீது எழுகின்றன.அவரோட வாக்குப்படி ராஜிவ் காந்தியை நண்பன் என்கிறார்.அதே சமயத்தில் சோனியா காந்தி உயர்நிலைப்பள்ளியைக் கூட முடிக்கவில்லையென்றும்,லண்டனில் கல்லூரியில் படித்ததாக சொல்வதெல்லாம் பொய் என்றும் தூண்டி துருவி ஆதாரங்களையெல்லாம் கொண்டு வருகிறார்.

 இது மட்டுமா பிரியங்கா,ராகுல் என இத்தாலிய வம்சம்,ராகுல் எப்படி பிரதமர் ஆவார் என்று பார்த்து விடுகிறேன் என்ற சூளுரை வேறு.ஒரு வேளை பி.ஜே.பி சார்பாளனோ என்று சந்தேகித்தால் வாஜ்பாய் இவரை மந்திரிசபையிலேயே சேரவிடாமல் ஒதுக்கி விட்டார்.எனது அரசியல் எதிரிகள் என ஒரு நீண்ட பட்டியலே வைத்திருக்கிறார்.அப்படியிருந்தும் ஜெகஜீவன்ராம்க்கு பாஸ் மார்க் வழங்குகிறார்.இப்பொழுது மீராகுமார் கூட இவரைக் கண்டு கொள்வதில்லை.
மத்தியில்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டில் மதுரையின் சோழவந்தான் மண்வாசனையுடைய மனிதனாச்சே என்று கணிக்க நினைத்தால் தமிழர்களே பிடிக்காத குணம்.இது தவிர கருணாநிதி எட்டிக்காய்.ஜெயலலிதாவோ சொல்லவே வேண்டியதில்லை.நான் சண்டைபோட்ட மனிதர்களில் ஜெயலலிதாவை மட்டுமே அடக்க சிரமப்பட்டதாக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.அடுத்தவர்கள் மீது கேஸ் போடுவது லட்டு சாப்பிடற மாதிரி.அதே சமயம் வாய்ச்சவடால் செய்து விட்டு காம்ப்ரமைஸ் செய்யும் சுபாவமும் கூட.

காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் ராசாவை களி திங்க வைத்தது மாத்திரமே அரசியல் பதவிகள் இல்லாமல் கூட செய்த சாதனைகளில் உச்சம் எனலாம்.இதுமட்டுமா சாதனை செய்தேன்!இந்தியா அந்நியச்செலவாணி நெருக்கடியில் இருக்கும் போது எந்த கடன்பத்திரத்திலும் கையெழுத்துப் போடாது நிபந்தனையில்லாமல் அமெரிக்காவிடமிருந்து 2 பில்லியன் டாலர் வாங்கித் தந்தேன் என்கிறார்.உலகிலேயே முதல் நல்ல,கெட்ட வியாபாரி அமெரிக்கா நிபந்தனையில்லாமல் கடன் தந்திருந்தால் சுப்ரமணியன் சுவாமியின் சாதனையே எனலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரும் போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பின் குவைத்,ஈராக் நோக்கி செல்லலாம் என்ற நிர்பந்தத்தில் பெரிய மீனாக வளைகுடாப் பெட்ரோலைக் கட்டுப்படுத்தும் சக்தியை உணர்ந்தே அமெரிக்கா 2 பில்லியன் டாலர் சின்ன மீன் தூண்டிலை  கடன் பத்திரமில்லாமல் வீசியிருக்கும்.அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் சுப்ரமணியன் சுவாமி நண்பன்.எனவே அமெரிக்க உளவாளி, சீனாவின் கைப்புள்ள என்ற பட்டப்பெயர்கள் இயல்பாய் இவருக்கு வந்து ஒட்டிக்கொள்கின்றன.
டெல்லிக்கும்,மெட்ராஸ்க்குமான அடிக்கடி பயணத்தில் இந்தியும்,தமிழும் கற்றுக்கொள்ளும்படி ஆங்கிலத்திலிருந்து நாக்கு திருந்தி விட்டாலும் ஐயாவுக்கு தமிழ்ன்னா எட்டிக்கசப்பு.திராவிட கொள்கையாளர்களுக்கு தமிழும்,பெரியாரையும் பிடிப்பது போலவே சுப்ரமணியன் சுவாமிக்கும் சமஸ்கிருதமும்,காஞ்சி பெரியவாள் மாத்திரமே பிடித்தவைகள்.

அவரவர் சுயவிருப்பங்கள் இருப்பதில் தவறில்லை.ஆனால் அடுத்தவர்களின் வாழ்வின் விளையாட்டில் இந்துத்வா நிலைப்பாட்டில் இஸ்லாமியர்களை வெறுப்பதும்,தமிழர் எதிர்ப்பு உணர்வு  மாத்திரமல்லாமல் சுப்ரமணியன் சுவாமியின் ஆத்மா எங்கே மரித்துப்போகிறதென்றால் எந்த மனிதர்களை யும் நேசிக்காத மனபாவம்.இந்த குணம் எங்கே வெளிப்படுகிறதென்பதை சமீபத்தில் சுப.வீரபாண்டியனுடன் கலந்துரையாடல்(?) செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி மட்டுமில்லை, விடுதலைப்புலிகள் மீதான அவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலும் புரியும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில தவறுகள் விமர்சனத்துக்குரியதென்ற நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை வகுத்துக்கொண்டால் கூட தவறில்லை.மொத்த தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு வரலாற்றில் மட்டுமல்ல, அனைவரிடமும் இவரை அந்நியப்படுத்தியே வைக்கும்.
விடுதலைப்புலிகளின் வலுவான இயக்கம் இல்லாமல் மறைந்து போனதன் பின்பான நிலையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பற்றி சின்ன விமர்சன துரும்பைக்கூட கிள்ளி போடாத நிலையில் தமிழரை நேசிக்காத அப்பட்டமான முகம் இவரிடம் தெரிகிறது.விடுதலைப்புலிகள் மீதான இவரது கோபத்துக்கு என்ன காரணம் என்று இவரிடம் கேட்டால் விடுதலைப்புலிகள் மார்க்சீய சிந்தனைவாதிகள் என்கிறார்.அதனால்தான் ரஷ்யாவும்,சீனாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை செய்கிறதோ?இந்துத்வா என்ற மொத்த சிந்தனையில் பார்த்தாலும் கூட தமிழக தமிழர்களை விட வலுவாகவே வட கிழக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்களும் கோயில் தேர் இழுக்கும் வலிமைக்காரர்களாயிற்றே!சுப்ரமணியன் சுவாமி என்ற களிமண்ணில் எந்த உருவத்தைக் கொண்டு வருவது?

இத்தனை விமர்சனங்களை முன்வைத்தும் கூட சுப்ரமணியன் சுவாமியை இங்கே விவாதிக்க வேண்டிய அவசியமென்ன? தமிழீழம் குறித்து தொடர்ந்து அவ்வப்போது பலரும் கருத்து பகிர்வுகளை முன்வைத்தாலும் இலங்கையின் வடகிழக்கு தமிழர்களுக்கான உறுதியான  தீர்வாக எதுவுமே இல்லை . ராஜபக்சேவை போர்க்குற்றவாளியென குரல் கொடுத்து விடுவதில் மட்டுமே தீர்வுக்கான முடிவுகள் வந்து விடுமா?என்றாவது ஒரு நாள் ராஜபக்சே குழுக்களின் ஆட்சி மறையும் என்ற போதிலும் தமிழர்களுக்கான தீர்வு என்ன?தீர்வுக்கான சாத்தியங்கள்  என்ன எனபதை தமிழ் உணர்வாளர்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக்கொண்டிருக்க இலங்கைப் பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியுமென்று சுப்ரமணியன் சுவாமி  மூன்று வழிகளை முன் வைக்கிறார்.

ஒரு பக்கம் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பதோடு சட்டசபை தீர்மானம் போடவும்,புலம் பெயர் தமிழர்களில் பலர் உணர்வோடு தமிழீழத்துக்கு குரல் கொடுக்க   ஏதாவது வழியில் 30 வருட போர்களில் அவதியுற்ற மக்களுக்கு விடியல் வந்து விடாதா என்ற நம்பிக்கையில்  முடிந்த வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்க அவரோ ஈழப்பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார்.

அதற்கு வை.கோ வும்,பழ.நெடுமாறனும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளவேண்டுமென்ற முன் நிபந்தனையை விதிக்கிறார்.மண் குதிரையை நம்பி இந்து மகாசமுத்திரத்தில் இறங்குவதா என்று   அவர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு மொத்த தமிழர்களுமே இதனை கண்டு கொள்ளவில்லை.சுப்ரமணியன் சுவாமி கிட்ட தூது விடுவதை விட கருணாநிதி,ஜெயலலிதா இருவரின் தாவு தீரும் சண்டையை தமிழர்களால் நிறுத்த முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டின மாதிரிதான் என்பது தமிழர்களுக்கு தெரியாதாக்கும்! 

சுப்ரமணியன் சுவாமி விடுதலைப்புலிகள் மீதான தனது நிலைப்பாடு வேறு,தமிழ் மக்கள் மீதான நிலைப்பாடு வேறு என்று ஜெயலலிதா மாதிரியாவது  நினைத்தால் அதனை அறிக்கைகள் மூலமாகவும்,பேட்டிகள் மூலமாகவும் வெளிப்படுத்தலாமே!ஆனால் அதனையும் செய்வதில்லை. குட்டையையும் குழப்புவேன்,மீனும் பிடிப்பேனாக்கும் என்று இலங்கையின் தீர்வுக்காக மூன்று வழிகளை சொல்கிறார்.சுப்ரமணியன் சுவாமி  சொல்லும்  மூன்று தீர்வுகள் என்ன?

1. இந்தியா மாதிரியான பெடரல் அமைப்பு (Federal Government)


2. தனி நாடுகளாக பிரித்து விடுவது (Sovereign Two States)


3. இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது (United Srilanka India)


இந்த மூன்றில் ஏதாவது நிகழுமா என்றால்  முதலாவதான பெடரல் அமைப்புக்கு தன்னைப் போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், உலக நாடுகளின் அழுத்தங்களால் ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்தாக வேண்டுமென்ற நிலையில் ராஜபக்சே பாராளுமன்ற ஆதரவுடன் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் பெடரல் அமைப்பாகவே இருக்கும்.இதற்கு சுப்ரமணியன் சுவாமியின் உதவியெல்லாம் ஒன்றும் தேவையில்லை.
இலங்கையை இரண்டாக தனி நாடுகளாகப் பிரித்து விடுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதனை தமிழர்கள் குரல் எழுப்புவதோடு  சிங்களவர்களும் குரல் எழுப்பும் சந்தர்ப்பங்கள் உருவாகுவது சிறப்பாக இருக்கும்.ஒற்றை ஆட்சியே ஆனால் சம உரிமை கிடையாது என்பது இப்போதைய கால கட்டத்துக்கு வேண்டுமானால் இலங்கை அரசுக்கு சாதித்து விட்டோம் என்ற சின்ன மகிழ்ச்சியை தரலாம்.ஆனால் தொலைநோக்கில் நீரு பூத்த நெருப்பாகவே இருப்பதற்கே வழிவகுக்கும்.இல்லையென்றால் தமிழர்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக வாழும் சூழல்களுக்குப் பழகிப் போனவர்களாக சில அரசு சலுகைகள் உதவக்கூடும்.

இரு நாட்டுக் கொள்கைக்கு தமிழர்களின் ஒற்றுமை ஒரு பக்கமிருக்க அனைத்து உலக நாடுகளில் பெரும்பான்மையானவைகளின் தமிழர் சார்பு நிலை உருவாக வேண்டும்.இந்தியா உள்பட கடல்வழி பொருளாதாரத்தில் தங்களின் நலன்கள் எப்படி பாதுகாக்கப்படும் என சீனா,இந்தியா போன்ற நாடுகளை முன்வைத்தே அமெரிக்காவும்,ஐரோப்பிய நாடுகளும் தலையிடும். மிக முக்கியமாக வளைகுடா,லிபியா,சிரியா,இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளிலிருந்து தனது கவனத்தை வேறுபக்கம் திருப்புவதற்கான கால சூழல்களில் மாத்திரமே இலங்கையில் மூக்கை நுழைக்கலாமா?வேண்டாமா என்பதை மேற்கத்திய நாடுகள் தீர்மானம் செய்யும்.நவம்பர் மாதம் இலங்கை அரசு வெளியிடும் தனக்கு தானே குற்றமும்,தீர்ப்பின் முடிவுக்காக ஐ.நாவும்,மனித உரிமை அமைப்புக்களும் காத்துள்ளன.எனவே இன்னும் சில மாதங்கள் எந்த சலசலப்பு ம் இல்லாமலே  2011 கூட  நகரும்.

மூன்றாவதாக இந்தியாவும்,இலங்கையும் புத்திசாலி நாடுகளாக இருந்தால் செய்ய வேண்டியது இலங்கையை மொழி வாரி இரு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்து விடுவது.தற்கான ஸ்டேட்ஸ்மென்ஷிப் மன்மோகனுக்கோ,ராஜபக்சேவுக்கோ இப்போதைக்கு இல்லையெனலாம்.

ஒருவேளை சீனாவை நோண்டி விடும் திட்டம் ஏதாவது சுப்ரமணியன் சுவாமியிடம் இருக்கிறதோ என்னவோ:)ஒரு வேளை பி.ஜே.பி வலுவாக வருங்காலத்தில் ஆட்சி புரிந்தால் அகண்ட பாரதம் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக சீனாவின் கடல் பொருளாதார ஆதிக்க கிரியா ஊக்கி காரணமாக மூன்றாம் நிலைக்கு மாறும் வாய்ப்புக்கள் உள்ளது.   இலங்கை ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மை நாடாகி விட்டதால் இந்திய சாத்தியம் தற்போதைக்கு இல்லையென்றே கூறலாம்.ஆனாலும் இந்தியாவை நம்பிய   நிலையில் இலங்கை இன்னும் தொடரவே செய்யும்.

த்மிழர்களின் தாகம் தமிழீழமா அல்லது சேர்ந்தே வாழ்வோம் என்ற பெடரல் அமைப்பா அல்லது இப்போது தொடரும் சம உரிமைகளற்ற வாழ்க்கைப் போராட்டமா என்பதே இப்போதைக்கான கேள்வி.சுப்ரமணியன் சுவாமியை துணைக்கு அழைக்கலாமா?

டொஸ் மக்ஸ் கவிதைகள்

"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான்
வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப்
பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை
Add caption
 மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - டொ.ம 

Saturday, August 27, 2011

உண்மையின்பம்


தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]


நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்

கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே

நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ

ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்


சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!